(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர்கதை - தொலைதூர தொடுவானமானவன் – 01 - புவனேஸ்வரி கலைச்செல்வி

distantRelation

 

நண்பனின் நண்பனென எண்ணமோ?

அவன் பெயரில் உதித்த வண்ணமோ?

 

உள்ளுக்குள் ஒரு எதிர்ப்பார்ப்பு,

அதை மறைத்திட சின்ன நடிப்பு!

 

சில அறிமுகங்களுக்கு இடையில்,

அரைநொடி பரிமாற்றம் எங்களுக்குள்!

 

“ஹாய்” என்ற குறுந்தகவலில்

மாயமாய் ஒரு குறுகுறுப்பு!

 

“எப்படிப்பட்டவன்?”

மூளை கேட்ட கேள்வியினால்,

மனம் தொடங்கியதே பதில்தேடும் வேள்வியொன்றை!

 

அவன் அகம் எப்படி இருக்கும்?

முகம் கண்டு கணித்திடுவோம்!

 

அன்பொழுகும் விழிகளை மறைத்த கருப்புக்கண்ணாடியும்,

இனிய சொல் பேசும் இதழை இழுத்து பிடித்த கேலி சிரிப்பும்,

 

அவனுக்கு சூட்டிச் சென்ற அடையாளம்

“திமிர் பிடித்தவன்!”

 

அந்த திமிர் பிடித்தவனைப் பற்றி அடுத்த கவிதையில் சொல்லுறேன்

தொடரும்...

Episode # 02

{kunena_discuss:1171}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.