வள்ளியம்மையும் எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும் என்றார். ஆனாலும் அவளை அவர்களிடம் இருந்து ஒதுங்கவிடவில்லை.
நிறைய விருந்தாளிகள் வந்திருந்ததால் சமையல் செய்வதற்கு ஆள் ஏற்பாடு செய்திருந்தார் வள்ளியம்மை. அதனால் அவளுக்கு வேலை இல்லாம் போயிற்று.
ஸ்டெல்லாவும் தன் தாய் தங்கைகளோடு வந்து சேர பொழுது எளிதாகக் கரைந்தது. வழக்கம் போல் ஸ்டெல்லாவின் தாய் வளர்மதி அறையிலேயே அடைந்துகொண்டுவிட்டாள்.
வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருந்தவர்களின் குழந்தைகள் பூமிகாவால் ஈர்க்கப்பட்டு அவர்களோடு வர பெரியவர்கள்தான் ஒதுங்கிவிட்டார்கள். பிள்ளைகளுக்காவது தன்னைப்பிடித்திருக்கிறதே என்று தென்றலும் அவர்களோடு ஒன்றிவிட்டாள்.
அவர்களுக்குச் சரியாக விளையாடி அவர்களுக்கு வேடிக்கைக் காட்ட நேரம் போனதே தெரியவில்லை.
பேச்சு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
லா தவறாகப் பேசிவிட்டார்களே என்று உயிரை மாய்த்துக்கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும்?
அவளையே நம்பியிருக்கும் அவளது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும்.
மனம் கேளாமல் தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான்.
அவர்கள் பேசியதை முகிலன் மட்டும் கேட்கவில்லை. வளர்மதியும் கேட்டிருந்தாள்.