தங்களுக்குள் செல்ல சண்டை வரும்பொழுது தான் தான் இந்த வீட்டு ஆம்பளை. அப்பாக்கு அடுத்து அனைவரும் அவன் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்று மிரட்டுவான். அந்த ஆம்பளை இன்னும் குழந்தையாகவே இருக்கிறானே என்று சிரித்துக் கொண்டாள்.
ஒருவேளை எனக்கு பதிலாக இவன் முதலில் பிறந்து இருந்தால் இந்த துன்பம் தனக்கு வந்திருக்காதோ என்று நினைத்தாள். அப்படி என்றாலும் அவனும் கஷ்ட பட்டுதான் ஆகவேண்டும். என்ன தன் கஷ்டத்தை விட அவனுக்கு வேறு மாதிரியான துன்பமாக அமைந்திருக்கும். எப்படியோ யாரோ ஒருத்தர் சிலுவையை சுமந்தாகனும். அது தானாகவே இருக்கட்டும் என்று தேற்றி கொண்டாள்.
பின் மணியை பார்த்தவள், நேரம் ஆகவும் வேகமாக காலை கடன்களை முடித்து, பின்கட்டுக்கு சென்று சாணம் எடுத்து, வாசல் தெளித்து கோலம் போட்டு நடுவில் கொல்லையில் இருந்து கொண்டு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோயிலுக்கு போய்ட்டு வர்ரேன். “
“ஏண்டி, இந்த தாவனி ய போடாத. சேலைய கட்டுனு எத்தனை தரம் சொல்றது. 23 வயசு ஆகுது. இன்னும் இப்படி சுத்திகிட்டிருந்தா என்ன சொல்லுவாங்க
“எனக்கு பிடிச்சதுமா. அதுவும் இல்லாம அங்க போய் இதெல்லாம் போட முடியுமா? அதான் என் ஆசைக்காக இன்னைக்கு ஒரு நாள் மட்டும்”