கவிதைத் தொடர்கதை - அவ்விடம் எப்படியோ ? - தொலைதூர தொடுவானமானவன் – 04 - புவனேஸ்வரி கலைச்செல்வி
அவ்விடம் எப்படியோ ?
ஒற்றை கேள்வியில்.
தினம் தினம் திளைக்கிறேன் !
என் கைப்பேசிக்கு வயது மூன்று !
ஆனால் அவன் வரவிற்குபின்
அதற்கும் இளமை ஊஞ்சலாடுகிறது !
நொடிக்கொருதரம் அது சிணுங்கி சிரிக்க ,
நான் கிளிக்கி சிரிக்கிறேன் !
சிடுசிடு ஆண்கள் கதாநாயகர்களாம் !
கவலை மறந்து சிரிக்க வைப்பவருக்கு ஈடாக முடியுமா ?
சின்ன சின்ன வார்த்தை அம்புகளினால்
இன்பமெனும் பூமழை பொழிந்து
அவன் மன்னனாகி என் மனதை
சமரமாக்கி அவன் பக்கம் வீசச் செய்கிறானே !
இதோ சிணுங்குகிறது என் கைப்பேசி மீண்டும் !
"மேடம் பிசியா ?"
என் நேரத்தை எல்லாம் கடத்தி சென்றும் கேட்கிறான் !
பேசாத நேரங்களிலும் என் சிந்தையை களவாடிவிட்டு கேட்கிறான் !
அவனுக்காக நேரம் ஒதுக்குவேன் என்றறிந்தும் கேட்கிறான் !
குறும்புடன் நகைக்கிறேன் !
"ஆமாம்பா .. மாமா வந்திருக்காங்க !"
"அத்தையின் ஹஸ்பண்டா ?"
"ச்சீ ..ச்சீ .. என்னோட " என்றனுப்பிவிட்டு மௌனம் கொள்கிறேன் !
பதிலில்லை அவனிடம் !
காத்திருக்கிறானோ ?
இன்னும் விளையாடிடவா ?
"என்னோட அம்மாவின் தந்தையின்
மகனின் மனைவியின் மூத்த மகன் "
"ஏன் இப்படி இழுக்கிறாய் ? "
"எப்போதுமே தூரமான உறவு அவன் " என்றேன் ..
"உப்ப் " பெருமூச்சுடன் பதில் தந்தான் !
அந்த பெருமூச்சாவது சொல்லிடுமா?
நான் அவனின் உயிர்மூச்சா ?
தொடரும்...
{kunena_discuss:1171}