(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - என்னவளே - 13 - கோமதி சிதம்பரம்

ennavale

ICU பிரிவில் கீதா அட்மிட் செய்ய பட்டுஇருக்கிறாள் என்று reception பெண் கூறியதை கேட்ட பருவதம் அம்மாள்.

அந்த ஆஸ்பத்திரியின் மூன்றாவது தளத்திற்கு விரைந்து சென்றார்.

ICU வாசலாலில் ரிஷி அவனது கைகளை பார்த்தவாறு இடிந்து போய் உட்கார்ந்து இருந்தான்.

வேகமாக வந்த பருவதம் அம்மாள், ரிஷி கீதாக்கு என்ன ஆச்சு டா.....  என்றவாரேயே அவனது கைகளில் படிந்து இருந்த  இரத்தத்தினை  பார்த்தார்.

அவனது ஆடையிலும் இரத்த கரை இருந்தது...... பருவதம் அம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை....

அவர்க்கு தலை சுற்றுவது போல இருந்தது....  ரிஷிக்கு அருகில் இருந்த ச்சர்யில் உட்கார்ந்து தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டார்.

தன்னை சுற்றி நடப்பது ஏதும் தெரியாமல்  ரிஷி பித்து பிடித்தவன் போல உட்கார்ந்து இருந்தான்.

மெதுவாக, அவனது தோளை உலுக்கிய பின்னரேயே பருவதம் அம்மாளை ரிஷி பார்த்தான். தன்னை சுற்றி நடந்து கொண்டு இருப்பதையும் அப்போதுதான் அவன் உணர்ந்தான்.

பருவதம் அம்மாளை பார்த்த பின்னர் அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

அத்தை, நான் தப்பு பண்ணிட்டேன்..... நானேயே கீதாவை கொன்னுட்டேன்..... என்று கதறி அழுதான்.

இதோ பாருங்கஅத்தை என்று தனது கைகளை நீட்டியவன் அதில் படிந்து இருந்த கீதாவின் இரத்தத்தை பருவதம் அம்மாளிடம் காட்டினான்.

என் கீதாவோட இரத்தம் அத்தை..... அவளுக்கு எவ்ளோ வலிச்சு இருக்கும்.... எல்லாத்துக்கும் நாந்தான் காரணம் என்று புலம்பினான்.

பருவதம் அம்மாள் தான் ரிஷிக்கு ஆறுதல் கூறி ஒருவழியாக அவனை தேற்றினார்..... ரிஷி, இங்க பாரு.... கீதாக்கு ஒண்ணும் ஆகாது..... நீ முதல்யா தைரியமா இரு.....

கீதா, உனக்காக பொறந்தவ உன்ன விட்டுட்டு அவ எங்கையும் போகமாட்டா டா.....

இல்ல... அத்தை கீதா என்கூட வாழவேண்டாம்..... அவ உயிரோட இருந்த எனக்கு அது போதும்.... அவ கூட வாழ்ற தகுதி எனக்கு இல்லை....

கீதா, நான் கஷ்டப்படக்கூடாதுனு எனக்காக எல்லாம் செஞ்சு இருக்க..... ஆனா, நான் அவளுக்கு கொடுத்த கஷ்டம் தாங்காம உயிரேயே விட முடிவு எடுத்துட்டா.....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எல்லாம் என் தப்புதான் அத்தை..... என்று கூறிய ரிஷியை நம்ப முடியாமல் பார்த்தார் பருவதம் அம்மாள்.

ரிஷி, முதல் லாய என்ன பாரு???? என்ன நடந்துச்சுன்னு சொல்லு???? திடிருனு போன் பண்ணி கீதாவை ஹாஸ்பிடல் ல இருக்க வாங்கன்னு சொன்னாயே????

இங்க வந்து பார்த்த  கீதா ICU லா இருக்க????  நீ என்னடான்னா எல்லாத்துக்கும் நீதான் காரணமான்னு சொல்ற????

என்ன ஆச்சு டா???? அவளை அடிச்சுட்டியா?????? என்று பதற்றத்துடன் கேட்டார் பருவதம் அம்மாள்.

ரிஷி, பருவதம் அம்மாளிடம் நடந்த அனைத்தையும் கூறினான்.... ஆனால், கீதாவின் தாயை பற்றி மட்டும் ரிஷி ஏதும் கூறவில்லை.

கீதாவை தவறான பெண்ணாக ரிஷி கூறியது பருவதம் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அறிவு இருக்க ரிஷி உனக்கு???? எவ்ளோ சொன்னேன் பொறுமையா இருன்னு???? இப்ப பாரு அவளை பத்தி உண்மை உனக்கு தெரிஞ்சுதோ இல்லையோ.....

ஆனா, கீதா நம்மள விட்டு போய்டுவா போல..... ஏன்டா, இப்படி பண்றீங்க சேகர் தான் போய்ட்டான்..... நீங்களாவது நல்ல இருப்பிங்கனு நினைச்ச...... ச்சே  

இல்ல அத்தை சத்தியமா அவளை நான் தப்பா  நினைக்கலை.... கீதாவை என்னால தப்பா நெனைக்கவும் முடியாது....

அவ எல்லா உண்மையை சொன்ன பிறகு அவகூட சேர்ந்து வாழ தான் நான் நெனச்சேன்.....

அதுக்காக தான், பொய்யாக அவளை தப்பா பேசுற மாதிரி நடிச்சேன்.... என்று கூறியவனை பார்க்கும் பொழுது பருவதம் அம்மாவிற்கு பரிதாபமாக இருந்தது.

ச்சே.... காதல் என் ஒருவரை இவ்ளோ பலகீனம் ஆக்கி விடுகிறது..... ரிஷி போன்ற ஒரு பிசினஸ் மனேயே அழ வைத்து விடுகிறது......

கீதாவோ, கையை கிழித்து கொண்டு உயிரையே விட துணிந்து விட்டாள்.... ஒரு காலத்தில் தானும் இது போன்ற முடிவுதானேயே எடுத்தேன்.....

இன்று, அதேயே முடிவை கீதாவும் எடுத்து இருக்கிறாள் என்று நினைக்கும் போதேயே அவரது கண்ணிலும் கண்ணீர் வர ஆரம்பித்தது.

ICU வார்டு யில் இருந்து வெளியில் வந்த டாக்டர் இவர்களை நோக்கி வந்தார்.

ரிஷி, ஷி இஸ் safe..... பயப்பட வேண்டாம்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுடுவாங்க.... அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க என்று கூறினார்.

பருவதம் அம்மாள் நன்றியுடன் டாக்டர் யை நோக்கி கை கூப்பினார்....

ரிஷிக்கு, தனது உயிரேயே திரும்பி வந்தது போல இருந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.