ராம் வரவும், எல்லோரும் சேர்ந்து இரவு உணவு உண்டு தங்கள் அறைக்குத் திரும்போது தான் மைதிலிக்கு நினைவு வந்தது ஷ்யாமிடம் பேசவில்லையே என்று.
இப்போது பேசலாமா என்று எண்ணும்போதே ராம் அவளை அழைக்கவே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி சென்று விட்டாள்.
தங்கள் அறைக்கு வந்த ஷ்யாம், படுப்பதற்கு முன் ரெப்ரெஷ் செய்து விட்டு வர செல்ல, மித்ரா தன் இரவு உடை கூட மாற்றமால், தன் டெட்டியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.
மித்ரா, வின்னியைக் கையில் வைத்து இருப்பதைப் பார்த்தவன், அவளின் முகம் குழப்பம் காட்டவே, அவளை சமாதனாம் செய்யும் பொருட்டு, அவளின் கையிலிருந்து வின்னியை வாங்கி அதனிடத்தில் வைத்து விட்டு வந்தவன்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“என்னடா ஆச்சு குட்டிமா? ரொம்ப டல்லா இருக்கே ? என்று கேட்டான்.
அவன் வின்னியை எடுக்கும் போது அவனைப் பார்த்து முறைத்தாலும், எப்போதும் போல் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.
மித்ரா ஒன்றும் இல்லை என்று கூறினாலும். அவன் மார்பினில் தலையை வைத்துச் சாய்ந்து அமர்ந்தாள்.
“சொல்லுடா “ என்று மீண்டும் கேட்கவும்,
“ஒன்னும் இல்லை. எதோ யோசனை அவ்வளவு தான். “
“ஹ்ம்ம்.. நீ சொல்றன்னு நம்பறேன்” என்று மட்டும் கூறியவன், அவளின் தலையை மெதுவாகக் கோதிக் கொடுத்தான்,.
சற்று நேரத்தில் மித்ரா தூங்கி விட, அவளை கட்டிலில் படுக்கச் செய்தவன், தாயைத் தேடி அவள அறை வரைக்கும் சென்றவன், பின் மணியைப் பார்த்து விட்டு தூங்குவார்கள் என்று எண்ணி விட்டுத் தன் அறைக்கே சென்றான்.
ஹாய் பிரெண்ட்ஸ்..
நவராத்திரி நேரம் என்பதால் , சற்று சிறய அப்டேட் தான் கொடுக்க முடிந்தது. படித்து கருத்துப் பகிருங்கள்.
அனைவருக்கும் இனிய ஆய்த பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்”
தொடரும்
{kunena_discuss:1187}