(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 04 - மஹா

enathuyire

விடியற்காலை கண்விழித்து பார்த்த போது அன்புவின் மார்பில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தாள். அவளின் அன்பு மாமாவின் மனைவியாக அவனோடு உறங்கி இருக்கிறாள் அதுவும் அவனின் அணைப்பில். எதோ காற்றில் பறப்பது போல் இருந்தது அவளுக்கு. மெல்ல அவனின் கன்னத்தில் தன் இதழ் பதித்தவள் அவனது அணைப்பில் இருந்து வெளி வர மனமில்லை என்றாலும் ஒருவாறு தன்னை சமாதானம் செய்து கொண்டு எழ எத்தனித்த போது தான் அதை கவனித்தாள். அன்பு அவளின் கழுத்தில் இருக்கும் தாலியை ஒரு கையால் பிடித்து கொண்டே உறங்கி கொண்டு இருந்தான். "அஞ்சு வயசு வர அன்பு என் கழுத்துல இருக்க செயினை பிடிச்சி கிட்டு தான் தூங்குவான்" என்று தன் அத்தை எப்போதோ கூறியது நியாபகம் வந்தது அவளுக்கு.

சற்று நேரம் அப்படியே அவனது மார்பில் படுத்துக்கொண்டு அவனையே காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

முன்பு ஒரு நாள், தன் அன்னை படத்திற்கு முன் தமிழின் கையை பிடித்து கொண்டு, "என் அம்மாவுக்கு அப்புறம் நா நேசிக்குற ஒரே பொண்ணு நீ தான். நீ மட்டும் தான். என் அம்மா இறந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு, நீ மட்டும் அந்த நேரத்துல எனக்கு தொணையா இல்லாம இருந்து இருந்தா என் ஒடம்புல உயிர் இருந்து இருக்காது. நீ எனக்கு மனைவியா மட்டும் இல்ல என் அம்மாவாவும் இருக்கணும்னு ஆசை பட்றேன்", என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளின் காதுகளில் ரீங்காரம் இட்டு கொண்டிருந்தது.

அப்போது அவளுக்கு அவன் வளர்ந்த ஆண்மகனாக தெரியவில்லை. தாயை தேடும் சிறுபிள்ளையாகவே தோன்றினான். அவனின் நிலை அறிந்தவள் அவனை தன் மார்போடு அணைத்து கொண்டு அவனின் கேசத்தை வருடி கொடுத்துக்கொண்டிருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வெகு நேரம் கழித்து கண் விழித்தவன் தமிழ் தன் அருகில் இல்லை என்று உணர்ந்து எழுந்து அமர்ந்தான். அப்போது பூஜை அறையில் சத்தம் கேட்க எழுந்து எட்டிப்பார்த்தான். அங்கே அவனுக்கு பிடித்த நீல நிற புடவையில் ஈர தலையில் துண்டை சுற்றியவாறு அழகு சிலையாய் அவள் பூஜை செய்து கொண்டிருப்பதை கண்டவன் தன்னை மறந்து அவளை ரசித்து கொண்டே நின்றிருந்தான். பூஜையை முடித்தவள் சமையல் அறைக்கு செல்ல அவனும் குளிக்க சென்றான். குளித்து முடித்து வெளியே வந்தவனை பின்னாலிருந்து கட்டி கொண்டவள்,

"மாமா... லவ் யு சொல்லு", என்றாள்.

"அடியேய்... காலைலே ஏண்டி இப்டி பண்ற?. நானே கஷ்ட பட்டு கன்ட்ரோல்டா இருக்கேன்..."

"அப்படியா???... இல்ல நா பூஜ பண்ணிக்கிட்டு இருக்கும் போது என்ன நீ சைட் அடிச்சிட்டு நின்னுட்டு இருந்தத பாத்தேன். சரி.... பாவம் மாமா தூரத்துல இருந்து எட்டி எட்டி பாத்து கஷ்டபட்ராரே கிட்ட வந்து நிக்கலாம்னு பாத்தா ரொம்ப ஓவரா பன்றியே..." என்றாள் குறும்பாக.

தான் அவளை பார்த்ததை அவள் கவனித்துவிட்டாள் என்று அறிந்தவன் அசடு வழிந்து கொண்டே அவள் புறம் திரும்பியவன் சட்டென தன் முக பாவத்தை மாற்றி,

"ம்... என் பொண்டாட்டிய நான் பாக்க கூடாதா???", என்று சமாளித்தான்.

அவனின் செய்கையை கண்டு மனதிற்குள் சிரித்தவள்,

"ஐயோ.... உங்க பொண்டாட்டி நீங்க பாருங்க நா தடுகள ஆனா என்ன ஒரு முறை லவ் யு சொல்லிட்டு பாருங்க", என்றாள் பதிலுக்கு.

"சரி டி, லவ் யு" என்று கூறிவிட்டு நகர சென்றவனை வழி மறித்தவள்,

'இதுலா ஒத்துக்க முடியாது... ஒழுங்கா சொல்லு மாமா", என்றாள்.

"இப்போ உனக்கு என்ன தான் டி வேணும்."

"அது வந்து மாமா... என் கண்ண பாத்து 'லவ் யு டி பொண்டாட்டின்னு' சொல்லு நா என் வேலைய பாக்க போய்டுறேன்", என்று கூறி கண்ணடித்தாள்.

அவள் வேண்டுமென்றே அவனை வம்பிழுக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் அவளின் கண்களை நேரிட்டான், காந்தம் போல் ஈர்க்கும் அவளின் பார்வை அவனை ஏதேதோ செய்ய, தான் தாலி கட்டிய மனைவி அவன் அருகில் இருந்த போதும் தன்னால் அவளிடம் நெருங்க முடியவில்லையே என்று தன் நிலையை கண்டு நொந்து கொண்டான். "நேத்து நைட் இந்த சடங்க தள்ளி வச்சிக்கலாம்னு சொன்ன அப்போ பவ்யமா சரினு தலையை ஆட்டிட்டு இப்போ வேணும்னு இப்டி பண்றா. டேய் அன்பு... சமாளி டா..." என்று தனக்குள் கூறி கொண்டிருந்த போது,

"இன்னும் என்ன மாமா யோசிக்கற? சொல்லு" என்று வந்த தமிழின் குரல் அவனை நடப்புக்கு கொண்டு வந்தது.

சட்டென அவளின் கண்களை பார்த்தவன், "லவ் யு டி பொண்டாட்டி" என்று மின்னல் வேகத்தில் கூறியவன்,

"ஹே... கிட்சன்ல இருந்து எதோ ஸ்மெல் வருது பார் போ போய் என்னனு பாரு" என்று அவளை அந்த அறையில் இருந்து வெளியே அனுப்பி கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.