(Reading time: 10 - 20 minutes)

"நா தான் டி கதவை தொற", என்றான்.

அவனின் குரலில் உற்சாகம் அடைந்து கதவை திறந்தவள் அவன் உள்ளே வந்ததும்,

"மா...மா..." என்று அவனை கட்டி அணைத்து கொண்டாள்.

அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், "மேடம் என்ன பண்ணீங்க இன்னைக்கு?" என்றான்

"கொஞ்ச நேரம் கீழயே ஈஸ்வரி அம்மாகிட்டயும் ,பாட்டிகிட்டயும் பேசிட்டு இருந்தேன். அப்புறம் மேல வந்து சமைச்சேன். அப்புறம் என்ன பண்றதுனே தெரில மாமா சும்மா கொஞ்ச நேரம் படுத்தேனா அப்டியே தூங்கிட்டேன் இப்போ தான் எழுந்தேன்."

"ஹ்ம்ம்.. சரி டா."

"வேல விஷயம் என்னாச்சி மாமா?"

"ஏதும் செட் ஆகல டி. வரும் போது தாத்தாவை பாத்தன் அவரு தெரிஞ்ச இடத்துல சொல்லியிருக்கேன் சீக்கிரமே கெடச்சிடும்னு சொல்லி இருக்காரு... பாக்கலாம்"

"கண்டிப்பா கிடைச்சிடும் மாமா" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"வா மாமா சப்புடலாம்". நீ போய் கை கால் கழுவிட்டு வா நா சாப்பாடு எடுத்து வக்கிறேன்" என்று சமயலறைக்கு சென்றவளை கை பிடித்து தடுத்தவன் தான் வாங்கி வந்த மல்லிகை பூவை அவள் தலையில் வைத்தான். இதை சற்றும் எதிர் பாக்காத தமிழுக்கு மனம் சந்தோஷத்தில் மிதந்தாலும் தாங்கள் தற்போது இருக்கும் நிலையை அறிந்தவள், ,

"எதுக்கு மாமா இதுல இப்போ?. காச ஏன் வீணாக்குற?", என்றாள்.

"லூசா டி நீ? இது எப்படி வீண்னு சொல்ற?. இத நா உன் தலைல வச்ச அப்போ உன் முகத்துல அப்டி ஒரு சந்தோசம் தெரிஞ்சிது அதுக்கு முன்னாடி எதுவும் பெருசில்ல. கல்யாணம் ஆனா புதுசுல எல்லா பொண்ணும் ஆச படுற விஷயம் புருஷன் வாங்கி தர பூவும் புடவையும் தான். பின்னாடி நா எவ்ளோ வேணா சம்பாதிக்கலாம் பயங்கர வசதியா கூட உன்ன வச்சிக்கலாம் ஆனா கல்யாணம் ஆனா புதுசுல நா இந்த மாதிரி வாங்கி குடுக்கறதுலாம் அதுக்கு ஈடாகாது. எப்போவுமே இது ஒரு குறையவே உன் மனசுலயும் என் மனசுலயும் இருக்கும். இப்போ என்னால முடிஞ்ச பூவ வாங்கி குடுத்து இருக்கேன். வாங்கி கொடுத்தோம்னு இல்லாம ஒரு நல்ல புடவைய உனக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் விலையுயர்ந்ததா வாங்கி குடுக்கணும்னு ஆச இருக்கு சீக்கிரமே வாங்கியும் கொடுத்துடுவேன்", என்று அவன் கூற அவனை இருக்க அணைத்து கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"ஓய்... இதுக்கே கட்டிபிடிச்சா எப்படி உனக்காக இனொரு பொருள் ஒன்னு வாங்கிட்டு வந்து இருக்கேன்"

என்ன என்பது போல் நிமிர்த்து பாத்தவள் இடம் தன் பாக்கெட்டில் இருந்து மருதாணியை எடுத்து நீட்டியவன், "வா இன்னைக்கு நானே உனக்கு வச்சிவிட்றேன். தமிழ்... பொதுவா மருதாணி வைக்கும் போது மருதாணி எவ்ளோ செவக்குதோ அவ்ளோ நாம நேசிக்கறவங்கள நமக்கு பிடிக்கும்னு சொல்வாங்க. இப்போ நானே உனக்கு மருதாணி வச்சி விட போறேன் எவ்ளோ செவக்குதுனு பாக்கலாம்" என்று கண்ணடித்தவன் அவளின் விரலைகளில் மருதாணி இட ஆரம்பித்தான்.

என்ன சொல்ல ஏது சொல்ல

கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல

என்னென்னவோ உள்ளுக்குள்ள

வெளிய சொல்லாம என் வெட்கம் தள்ள

சின்ன சின்ன ஆச உள்ள திக்கி திக்கி பேச

மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோடு வீச

உத்து உத்து பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க

புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோடு சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்

ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

என்னோடு நீ உன்னோடு நான்

ஒன்றாகும் நாள்...

என்னோடு நீ உன்னோடு நான்

ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்

என்னோடு நீ உன்னோடு நான்

ஒன்றாகும் நாள்...    

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1228}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.