(Reading time: 17 - 33 minutes)

அவள் நெளிவதைப் தவறாகப் புரிந்து கொண்டவன் அவள் முழு கைவைத்த சுடிதார் துப்பட்டாவுடன் வருவதைக் கண்டவுடன் அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. பின் தான் தன்னால் தான் இவளுக்கு இன்னும் சிரமம் ஏற்படுகிறது. நான் வந்தது அவ்வளவு கம்படபுலா இருக்க முடியலையோ? அதனாலே தான் அணிந்திருந்த உடையை மாற்றி இந்த உடைக்கு மாறி இருக்கிறாள். பாவம் அவள் அம்மாவை பார்த்துக்கொள்வது மட்டுமில்லாமல் நாமும் இந்த நேரத்தில் வந்து சாப்பாடு செய்ய வைத்து சாப்பிட்டதும் இல்லாமல் அவளை சங்கடப்படுத்துகிறோம். இப்போது அவளால் ஃப்ரீயா கூட இருக்க முடியவில்லை என்று நொந்துபோனான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் என் முன்னாடி உன்னால் அந்த உடையில் இருக்க முடியவில்லையாடி என்று கடுகடு என்று கோபமும் வந்தது. அவள் நிலையை உணர்ந்து அமைதியாகவே சென்று அவன் அறையில் தூங்குவதற்கு இலகுவான உடையை அணிந்துகொண்டு சோபாவை இழுத்து அன்னையின் அறை பக்கம் திருப்பி போட்டுப் படுத்துக்கொண்டான்.

காலை மணி 6 அவள் எழுந்து குளித்து 7 மணிக்கு எல்லாம் சுடச்சுடச் சாப்பிட இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் தயார் செய்தாள். சிரித்த முகமாகக் கனி அம்மாவின் முன் வந்து நின்று அத்தை அம்மா என்று எழும்பச் செய்தால். அவள் குரலைக் கேட்டு எழுந்தவர் முகத்தில் அவ்வளவு கனிவும் மகிழ்ச்சியும் தெரிந்தது. அம்மு எப்பட்டா வந்த என்ற அவர் கேட்ட கேள்வி அவள் முகத்தில் குறும்பு சிரிப்பை வரவழைத்தது. அது சரி எப்பவந்த என்றா கேட்கிறீர்கள் இப்போதுதான் வந்தேன் அதெல்லாம் அப்புறம் பேச்சிகளாம் எழுந்து உட்காருங்கள் என்று கனி அம்மாவைச் சுடுநீரால் குளிக்கச் செய்து அவருக்குச் சாப்பிடுவதற்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரைகளையும் மருந்துகளையும் அருந்தச் செய்தாள். அம்மா நான்உங்கள டைனிங் டேபிள் முன் உட்கார வைக்கிறேன் நீங்கள் கொஞ்சம் நேரம் அங்கே இருப்பீர்களாம், நம்ப அங்க சாப்பிடுவோமாம் ஓகே .. என்று தாய்யாய் மாறி அத்தையை கவனித்தாள்.

அம்மூ ப்ளீஸ் டா... கஞ்சு வேண்டாமே ஒரு வாரமா அதுதான் சாப்பிட்டுட்டு இருக்கிறேன் நாக்கு செத்து போச்சு டா தயவு செய்து வேண்டாம் அம்மு.

.. சரி கஞ்சி வேண்டாம்

 அப்போது என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டவள் டாக்டர் கூறியபடி அவருக்கு மாத்திரையைப் போட்டு விட்டு தன் அத்யைை டைனிங் டேபிள் முன் அமரச் செய்தவள் மெல்லிய புகை கிளம்பும் வகையில் சாம்பிராணியை டேபிள் மீது வைத்தாள். சாம்பிராணி கோடையிலிருந்து மெல்லிய புகை மூச்சைத் திணறச் செய்யாத வகையில் மென்மையாக இருந்தது அதில் மூலிகைப் பொடிகளையும் தூவினால் அதற்கு நல்ல ஏப்பக்ட்டும் இருந்தது. கனி அம்மாவுக்கோ அவளைத் தவிர யாரும் கண்ணிலும் கருத்திலும் கூட படவில்லை. இப்ப சொல்லுங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அவள் கேட்க.

ம்ம்ம்ம்ம்..... கொஞ்சம் மிருதுவாக, சாப்டா தொண்டை வயிறு எதையும் இன்னும் எரிச்சலைக் கிளப்பாமல் சாப்பிட்டதும் ஜீரணமகாறா மாதிரி என்று அடுக்க

 அத்தை.... நீங்க எதையோ சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்துதான் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் அது என்னன்னு சொல்லுங்கள் செஞ்சி அசத்திடலாம் சொல்லுங்கள் என்றவள் சிரித்தபடி கேட்கக் கனியும் அசடு வழிந்தபடி எனக்கு இடியாப்பம் தேங்காய்ப் பால் சாப்பிடவேண்டும் போல இருக்குடா குட்டிமா என்றார் சிறு குழந்தை போல் அய்யோ அதையம்மா அவர்களைக் கொஞ்சியவள் இதோ என்று அவள் நகர அம்மு இன்றைக்கு வேண்டாண்டா ஏற்கனவே லேட்டாகிடுச்சு. நீ மட்டும் தனியா பணக்கஷ்டம் நாளைக்குச் செய்து கொடுத்தால் போதும் டா என்று பெரியவர் கூற அத்தை கொஞ்சம் இருங்கள் என்று சமையலறையில் நுழைந்தவள் இரண்டு நிமிடத்தில் கையில் சில பொருட்களையும் பாத்திரங்களையும் எடுத்து வந்து மேஜை மீது அடுக்கினாள் என்ன டா இது என்று கன்னி அம்மாவும் ஆர்வமாகக் கேட்க அத்தை அம்மா முதலில் திறந்து பாருங்கள் அதை நான் உங்களுக்காகவே ஸ்பெஷலாக செய்த சூப்பர் ப்ரேக் பாஸ்ட் என்றால். ஆர்வமாக அதைத் திறந்து பார்த்த கனி அம்மாவின் முகத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார். கேட்டு சில நொடிக்கும் முன்பாக கிடைத்து விட்டால் பின்பு என்னதான் வேண்டுமாம் என்று சின்ன பிள்ளைபோல் குதூகலித்தார். நான் இதைத் தான் கேட்கப் போகிறேன் என்று உனக்கு எப்படிடா தெரியும் எப்படி அதையே செய்தாய் என்று அவர் கேட்க நீங்க அப்படியே அவரைப்போலவே உங்கள் டேஸ்டும் அவரைப் போலவே தான் என்று ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் அதை வைத்துத் தான் செய்தேன் இரண்டு பேருக்கும் பிடித்தமாகச் செய்தது தான். நன்றாக இருக்கும் என்று தான் இதைச் செய்தேன்

அப்போதுதான் சோபாவில் இருந்து எழுந்து அவள் கண் முன் வந்து நின்றான் ஈஸ்வர் எப்பப்பா வந்த என்று அவர் கேட்க பௌவ்வை நிமிர்ந்து பார்த்தான். அவள் அம்மா நீங்கத் தனியா இருக்கிறீர்கள் என்று அப்பா அனுப்பினார் போல என்று அவள் சொல்லத் தம்பி நைட்டே வந்துட்டியா சாப்பிட்டாயா ஏன் சோபாவில் படுத்திருக்கிறாய் " தாயிற்கே உரிதான பாணியில் பாசப் பொழிவை கேள்விகளின் அருவியில் மிதக்கவிட்டார்.

2 comments

  • Nice episode oru Chinna request nenga yeluthum urainadai muraiya konjam casual ah pesara Mari kudukka midiyuma... Maththa padi unga kathiyin Kalam arumai :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.