அம்மா உங்களைத் தனியா விட்டுவிட்டு எப்படி அவர் போய் படுக்க முடியும் நீங்க சாப்பிடுங்கள் என்று கனியை திசை திருப்பியவள் நீங்களும் சாப்பிடலாம் வாங்க என்று அவனைப் பார்க்க நானும் எதுவுமே சொல்லச் செய்யவில்லையே என்ன இவ நம்ம மனசில் யோசிக்ரதுக்கெல்லாம் பதில் சொல்றா. யாருடா இவள் என்று யோசனையிலிருந்தவன் பவிம்மா என்று கூப்பிட்ட படி அங்கு வந்து சேர்ந்த ராதாவின் குரலில் பூலோகத்திற்கு வந்து சேர்ந்தான் "கதை பூரா இதுகளுக்கு இதே வேளை தான்" சமையல் உதவிக்கு மட்டுமில்லாமல் சில பொறுப்பு ராணிக்கு இருக்கிறது இத்தனை வருடம் இந்த வீட்டில் வேலை செய்பவர் என்று ராதா அவருக்கு உதவி செய்து வீடு சுத்தம் செய்யும் பொறுப்பு அவளுக்குக் கொடுக்கப்பட்டது பவிமா எப்பவந்த எம்மா நாளு கண்ணு ஆச்சி உன்நய பார்த்து. ஏண்டா நீங்க வரவில்லை என்ற கொஞ்ச. கொஞ்சம் வேலையாய் போய்விட்டது ராதா அக்கா வாங்க பசங்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று அவள் கேட்டுக்கொண்டே கனி அம்மாவிற்கு உணவைப் பரிமாறி ராதாவிற்கும் தனக்கு அருந்தக் காப்பி கலக்கிக் கொண்டு வந்து விட்டாள். என்ன கண்ணு நீ நான் எப்ப வந்தாலும் இப்படியே செய்கிறீர்கள் என்று சலித்தபடி அதை வாங்கி அருந்த ஆரம்பித்தாள். நீ என்று இல்லை ராதா அம்மு யார் வந்தாலும் இப்படித்தான் என்று அவர்களின் பேச்சில் கலந்து கொண்டார் கன்னியம்மா இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தவன் நாம் மட்டும் இவள் கண்ணுக்குத் தெரியவில்லையா நம்மளை மட்டும் எதுவுமே கேட்கவே இல்லையே இவ என்று அவளை மனதில் திட்டி விட்டு அம்மா எனக்கு என்று அவன் கேட்க இவள் இடியாப்பத்துடன் கொண்டு வந்ததை அவனை நோக்கி நகர்த்தி விட்டு டிரஸ் பண்ணி விட்டு வந்து சாப்பிடுவீர்கள் நான் பார்த்தேன் என்று கூற எனக்குக் காபி டீ பிடிக்காது என்று அவன் மூஞ்சியை ஒரு மாதிரி வைத்துச் சொல்ல அவள் சிரித்தபடி தெரியும் அதுதான் சத்து கஞ்சி எடுத்து வந்து வைத்து இருக்கிறதேன் என்றாள்
நாம் பிரஷ் செய்துகொண்டு வந்து தான் படுத்துக்கொண்டேன் என்று அவன் அந்தப் பெரிய டம்ளரின் மேல் தட்டை எடுத்து விட்டு ஒரு வாய்ப் பருக அவன் முகம் கண் அனைத்தும் விரிந்தது சந்தோஷத்தில். அவள் அதைப் பார்த்து திருப்தி அடைந்து அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் கனி அம்மாவின் தட்டிலிருந்த இடியாப்பம் காளியாக அதை நிரப்பும் வேலையைச் செய்தால் பேசியபடியே. கனி அம்மாவும் ஒரு கட்டுக் கட்டிவிட்டு அம்மாவின் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்து கட்டி அணைத்துக் கொண்டார் என்னவோ தெரியாதா உணர்வு அவனுள். ராதா இது என் மூத்த பிள்ளை சிங்கரீஸ்வரன் யுஎஸ்ஸில் இருந்து வந்திருக்கிறான் ஒரு வருஷமா வீட்டு பக்கமே வரவே இல்ல கல்யாணத்துக்கு முன்ன போனவன் இப்போதுதான் அவனுக்கு ஊருக்கு வழி தெரிஞ்சுச்சு என்றால் சலித்தபடி. வணக்கம் தம்பி என்ற பேரு ராசா உனக்கு என்னா வேணும் காட்டியும் என்னாட கேளு நான் செஞ்சித்தாரேன் என்று அவள் வெள்ளந்தியாக சிரிக்க தேங்க்ஸ் அக்கா நான் கண்டிப்பா கேட்கிறேன் என்று பதிலளித்தான் முகத்தில் புன்னகையுடன்.
ராதா நீங்கக் கொஞ்சம் உங்கள் வேலையெல்லாம் முடியுங்கல் நான் அம்மாவைக் கொஞ்சமா தோட்டத்துக்குக் கூட்டிப் போகிறேன் சரியா. முடித்துக்கொண்டு வந்து எங்களோடு ஜாயின் பண்ணிக்குங்க என்று அவர் வேலையை முடிக்கச் சொல்லி கையிலிருந்த தொலைப்பேசியை வைத்து ஏதோ நோண்டியபடி நீங்க குளிச்சிட்டு சாப்பிடுகிறீர்களா இல்ல இப்போதே எடுத்து வைக்கவா? வாங்க என்று அவனிடம் கேட்கஎன் முகத்தைப் பார்த்துக் கூட இவ்வளவால் பேச முடியலாம் அப்புறம் எதற்கு எனக்குச் சாப்பிட கொடுக்கவேண்டும் இந்த மகாராணி என்று மனதில் முறுக்கிக் கொண்டான் இவன் பசி என்று வந்து நடுராத்திரி இரண்டுக்கு வந்தாலும் சமைத்துப் போட்டதெல்லாம் மறந்துகொண்டான் பார்ட்டி அம்னீசியா போல் அவனுக்கு மடையன்.
நான் குளிச்சிட்டு தான் சாப்பிடுவேன் என்று அவன் கூறியதும் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துத் திரும்ப ஒரு பளிச் பார்வை, உடனே அதை மறைத்து வாங்கம்மா நாம்ப தோட்டத்துக்குப் போவோம் என்றபடி அவனமீது கை படாமல் அருகிலிருந்த கணியை கைதாங்கலாக அழைத்துச் சென்றால். இவன் முணுமுணுத்தது அவளில் காதிலும் கேட்டதுதான் ஆனால் தனக்குள்ளே சிரித்தபடி நகர்ந்து விட்டாள் குளித்துமுடித்து வெளியே வந்தால் யாரும் அங்கு இல்லை. தோட்டத்திலிருந்து இன்னும் வரவில்லையா என்று யோசித்தவன் அங்குச் சென்று பார்த்தால் அங்கே தோட்டத்தில் போடப்பட்ட ஊஞ்சலில் சாய்ந்தபடி அவள் அமர்ந்திருக்க அவள் மடியில் தலை வைத்து அம்மா. அம்மாவும் அவளும் தான் எவ்வளவு நெருக்கம் குழந்தை போலத் தாயின் மடியில் சுருண்டு உறங்கும் தன் தாயைப் பார்க்க மனதினில் ஏதோ சொல்ல முடியாத நிம்மதிதான் கொஞ்சமே கொஞ்சம் புகைத்தலும் இருக்கத்தான் செய்தது. அவள் மடியில் படுத்திருந்த அம்மா அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்கியிருக்க மற்றொரு கையால் அம்மாவின் தலையை மெதுவாகக் கோதிவிட்டு அவள் அன்னம்மா என்று சிறுபிள்ளையாய் அவள் மடியில் அவளும் அம்மாவைக் குழந்தை போலவே தட்டிக்கொடுத்து தோட்டக்காரன் சங்கருடன் ஏதோ பேசி அவனையும் சிரிக்க வைக்கிறாள். அவனும் வெட்கப்பட்டபடி வேண்டாத செடிகளைப் பிடுங்கி விடுகிறான். என்ன பேசுவார் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சரியாண பெண் என்று எண்ணியபடி அவர்களை நெருங்கச் சங்கரனா நீங்க பிடுங்குகின்ற செடி பாவந்தான் ஆனால் அவர்கள் நம்ம நாட்டு வைத்தியம் மூலிகை காய்கறிகளை அதிக வளரவிடாமல் பூச்சி பொட்டு வரவைக்ராங்களே அப்போது பிடுங்கரது தப்பு இல்லை அண்ணா. . நம்ம வாழ்க்கையும் அப்படி தான் சுத்தமா வைத்துக் கொள்ள வேண்டும் உங்கள் பாதுகாப்பில் உள்ள நம் தோட்டம் போல்.
என்றுமே உன் காதலி கண்ணமா