தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா
என்னவளே
கண்ணால் பேசும் உன்
மொழிக்கு இலக்கண விளக்கம்
சொல்லிப் போ
காதில் வந்து ரகசியமாய் !!!
ஈஷ்வரின் மனதில் தோன்றிய வார்தைகளுக்கு காரணமானது அந்த புகைப்படங்களில் இருக்கும் மனைவியின் கண்கள். ஏய் ராட்சசி என் கிட்ட எதாவது பேசுனியாடி இது வரைக்கும். நம்ம ரெண்டுபேரும் இப்போ கணவன் மனைவி டீ... உன் புருஷனைப் பார்த்துக்கொள்ள வேண்டியது மனைவியின் கடமை தானே.... ஈசீயா வெளியே தொரத்திட்டா.
வயிறு வேர சத்தம்போடுதுடி. பசிக்குதுன்னு நெனைக்கிறேன் என்று அவன் புளம்பும் சமயம்
டப் டப் டப்...... கதவைத் தட்டிவிட்டு கமல் வந்து மச்சான் சாப்பிட்டு வந்து உங்கள் மனைவியோடவே பேசுங்க இப்போ போட்டாவுக்கு பாய் சொல்லிக்கொண்டு கிலம்புரீங்களா??? என்னு சிரித்தபடி கூரினான்.
இந்த குடும்பத்துலேயே என் பொண்டாட்டிய மட்டும் தான் அமைதியான புள்ளையா வளர்த்து இருக்கிறார்கள் மற்ற அனைத்தும் அறாத்துகள் என்று மனதில் நினைத்து கொண்டே... இல்ல அவளும் வரட்டும் காலையில் இருந்து பால் கூட குடிக்கவில்லை அவள். இதோ வந்து விடுவாள் என்று அவன் கூர.
மச்சான் தங்கச்சி தான் நீங்கள் சாப்டாமல் பசியாக இருப்பதாகவும் உங்களை அழைத்து போய் அப்பாஸ் அம்மாஸ்சுடன் சாப்பிட வைக்க சொன்னாள்.
பரவாயில்லை என் பொண்டாட்டி என்னை பசியோடு காத்திருக்க விடவேண்டாம் என்று கமளை அனுப்பி இருக்கிறாள். சரி என்று ஈஷ்வரும் வந்து விட்டான்.
கீழே முற்றத்தில் அனைவருக்கும் வருசையாக வாழையிலை போட்டு கொண்டு இருந்தனர் நிவியும் சந்தியாவும். வேலை செய்பவர்கள் அனைவரையும் அமர்திக் கொண்டு இருந்தார் பௌவ்வின் பெரிய சித்தப்பா பார்தா . சின்ன சித்தப்பா அமிர்தன் இலைகளில் பரிமார வேண்டிய பொருள்களை சரிப்பார்க்க சிவா அம்மாவின் கீழ் பார்வையில் பார்வதியும் வள்ளியும் இனிப்பை வைக்க ஆறம்பித்தனர். அடுத்த சித்தியான அம்பிகை உணவைப் பரிமாரிணார். அர்களின் மகன்களுடன் நக்ஷ்ஷும் சேர்ந்து பரிமார அங்கிருப்பவர்களுக்கு தேவைபடுவதை கமளும் கணியும் கூட பார்த்து பரிமாரினர்.
முதலாளிகள் சாப்பிடும் முன் வேலை செய்யும் மக்கள் அனைவரையும் அமர்த்தி வயிறார உண்ண வைப்பது இந்த குடும்பத்தின் வழக்ககம். அந்த ஜோதியில் ஈஷ்வரனும் கமளும் கூட