முறை கூப்பிட்டும் காது கேளாதோர் மாதிரி அவளையே ஏன் பார்க்குரீங்க. அவள் என் மனைவி என்றான் அந்த கணவன்.
உன் பொண்டாட்டி என் பொண்டாட்டி மாதிரியே தெரிகிறாளே அதான் நான் பார்கரேன்...
அது சரி.... ஆனால் இவங்களாம் என்று மற்றவர்களை காட்டி கேட்க.
அதை நீ அவர்களை தான் கேட்க வேண்டும்.
அட போங்க தாத்தா ... என்று இவன் நொந்துக்கொள்ள
அனைவருக்கும் பரிமாறிய பௌவ் ஆதீயிடம் நின்று ஆதீப்பா என்றதும் அவளின் வாயில் ஒரு பால்கோவா துண்டைப் ஊட்டி விட்டார். இது வேரயா என்று இவன் நினைப்பதற்கு முன் அமர் மகளுககு பூரியை சட்டிணியுடன் இரண்டு வாய் ஊட்டி விட்டார். பார்த சாரதி அப்பா இட்டிலி தக்காளி சட்னியுடன் இரண்டு வாய். அமிர்தராஜன் ஊத்தாப்பம் சாம்பாருடன் ஊட்டி விட்டார்கள் .. அருகில் அமர்ந்து இருந்த கமல் மருமகளுக்கு தூல் தோசை ஊட்டி விட வாயில் வாங்கிகொண்டு கட்டவிரலுடன் ஆல் காட்டி விரலை மடக்கி மூன்று விரல்களை முத்திரைப்போல் காட்டி சூப்பர் என்றால் சைகையால். அம்மாக்கள் அண்ணாக்கள் அண்ணீகள் கணிஅத்தை இவர்களை துடர்ந்து தங்கை மற்றும் நக்ஷ் கூட அவன் பங்கிர்கு எதையோ ஊட்விட்டான் ரித்விக்கும் ரதியும் அவளுக்கு இனிப்பு ஊட்டினர். ஆனால் இவன் அருகில் அவள் வந்து எதையும் வாங்க வில்லை மாறாக நிவி வந்தாள் இவனுக்கு பரிமாற அவள் தன் சகோதரர்களுக்கு எதையோ பரிமாற தேடுகிறாள்.
ஒரு வழியாக அனைவரும் உண்டு முடித்ததும் கை கழுவச்செல்ல மெதுவாக தாத்தாவிடம் கேட்டான். இவ சாப்பிடலயே தாத்தா என்று. எல்லாரும் அந்தப்பக்கம் உட்கார்ந்தாள் நீ எதிர் திசையில் இங்கு அமர்ந்து சாப்பிடுவதாய் பேர் பன்னி உன் பொண்டாட்டியை சைட் அடித்தபடி கொரித்ததை விட அவ அதிகமாவே சாப்டு இருப்பா எழுந்து வந்து கை அலம்பு டா என்று உள்ளே இருந்தபடியே குரல் கொடுத்தது கமல்ஸசார்ங்க.
கூட இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க இவனுக்கு மறுபடியும் எஸ்கேப் ஆக நினைத்தால், வழி கிடைக்காமல் அசடு வழிய போய் கையலம்பி வந்தான்.
அதன் பின் அமைதியாக சென்ற மைந்தனை சும்மா விடாமல் டேய் உன் பொண்டாட்டி எங்கடா காணோம் என்று வம்புக்கு இழுக்க .... இவன் தந்தையிடம் இருந்து தப்பும் வழி கிடைக்காது தவித்தான். ஆனால் மனதினுள் ஆமாம் எங்க போய்டா அவ 8 நிமிஷம் 32 செக்கெண்டா ஆளையே காணோம்மே என்று தவித்தான். (இது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்டா ஈஷ்வர் பையா...) அவன் யோசித்த நொடி அங்கு வந்தாள் அவன் மனைவீ...
அனைவருக்கும் ஜிகர்தண்டா எடுத்து வந்தாள். அனைவருக்கும் ஒரு பெரிய என்றும்