“கண்டிப்பா மேடம்.... அப்பறம் மந்திரி எப்படி இருக்காரு... ஊருலதான் இருக்காரா...”
“ஆமாம் சார்... இன்னைக்கு ஊருலதான் இருக்கார்... நாளைக்கு எங்கன்னு இன்னைக்கு நைட்தான் தெரியும்...”, அவர் சொல்ல, மூவரும் சிரித்தபடியே விடைபெற்றார்கள்.... சக்தி காரை எடுக்க அவன் அன்னை ஏதோ யோசித்தபடியே இருந்தார்...
“என்னமா பயங்கர யோசனை....”
“ஏண்டா நல்லாத் தெரியுமா... சந்தியா இவங்களைத்தான் சொன்னாளா... பார்த்தா அப்பாவிங்க மாதிரி இருக்காங்களே... அதுவும் இல்லாம மூணு பேரும் சேர்ந்து ஆன் லைன்ல ப்ரீ கிளாஸ் எல்லாம் கஷ்டப்படற பசங்களுக்கு ஆளுங்களை வச்சு எடுக்கறாங்கடா... எந்த ஸ்டுடென்ட் வேணா இவங்க மெயில்க்கு மெசேஜ் பண்ணி அவங்க டவுட் க்ளியர் பண்ணிக்கலாம்... அதுக்குன்னே தனியா வெப்சைட் வச்சிருக்காங்க....”
“அம்மா இவங்க அப்பாவி இல்லை... அடப்பாவிங்க... நீ என்னம்மா இந்த மாதிரி கிளாஸ் யாரு வேணா நடத்தலாம்... இப்போ பிரதமர்க்கு கடிதம் போட்டா அவரேவா நமக்கு பதில் போடறாரு... அவர் சார்பா யாரோதானே பண்றாங்க... ஏன் அப்பாவோட அக்கௌன்ட்டே நம்ம ஜான்தானே பார்க்கறாரு.... அது மாதிரிதான்...”
“நீ சொல்றதும் சரிதாண்டா... இப்போ அவங்களை எப்படி அப்பரோச் பண்ண போற....”
“நான் ஏன் இனி அவங்களை பார்க்க போறேன்... அதுக்கெல்லாம் வேற ஏற்பாடு பண்ணியாச்சு...”
“என்னடா சொல்லுற.....”
“ஆம்மாம்மா நீங்க மூணு பேரும் பேசிட்டு இருந்தீங்கள்ல.... அப்போ ஒரு வேலை பண்ணி இருக்கேன்... இங்க பாருங்க... சக்தி தன்னிடமிருந்த வேறொரு செல் ஆன் செய்து காண்பிக்க அதில் மூவரும் காரில் பேசிக்கொண்டே செல்வது தெரிந்தது...”
“டேய் இது என்னடா மேஜிக்....”
“ஹாஹாஹா டேக்னோலாஜிமா... இனி அவங்க பேசற ஒரு ஒரு விஷயமும் இதுல ரெகார்ட் ஆகிடும்... அதோட அவங்க எங்க போறாங்க, வர்றாங்க எல்லாம் தெரிஞ்சுக்கலாம்....”
“இங்க பார்றா.... நல்லா மாட்டினாங்க...”
“ஆமாம்... சரிம்மா நான் உங்களை வீட்டுல விட்டுட்டு மதி சார் பார்க்க போறேன்...”, பேசியபடி தன் அன்னையை வீட்டில் இறக்கிவிட்ட சக்தி மதியை பார்க்க கிளம்பினான்....
“என்ன மனோஜ்... எதுக்கு வேலப்பனை வர சொல்லி இருந்தியாம்... என்ன விஷயம்....”
“அது ஒண்ணும் இல்லைப்பா... என்னோட நண்பனுக்கு ஒரு பிரச்சனை... அதுதான் வேலப்பனை வச்சு தீர்க்கலாம்ன்னு வர சொன்னேன்...”