“என்கிட்டையே கதை விடற பார்த்தியா... நான் உன் அப்பன்டா... ஒரு வாரமா அந்த காயத்ரியை நீ ஆள் வச்சு வேவு பார்க்குறது தெரியாதுன்னு நினைக்கறியா... இங்க பாரு கடைசியா சொல்றேன்... அந்த பொண்ணு மேல கையை வச்சு வீணா மாட்டிக்காத...”
“அப்பா அதெல்லாம் இல்லைப்பா... நான் நிஜமாவே வேற விஷயமாத்தான் அவனை வரவச்சேன்....”
“நான் சொல்றதை சொல்லிட்டேன்... ஒழுங்கா அந்த பொண்ணை மறந்துட்டு வேற வேலையைப் பாரு....”, தாளாளர் கண்டிப்புடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருக்கு அழைப்பு வந்தது....
“சொல்லுங்க பத்ரி சார்... என்ன விஷயம்....”
“சார் ஜேம்ஸ் போன் பண்ணி இருந்தாரு.... அவருக்கு மொத்தம் 10 வைரங்கள் வேணுமாம்.... அதுவும் அடுத்த வாரத்துக்குள்ள... என்ன பண்ணலாம் சார்....”
“என்ன பத்ரி இது... இவ்ளோ அவசரமா எப்படி பத்து வைரம் அனுப்ப முடியும்... சரி விடுங்க... நான் ஏற்பாடு பண்ண முடியுதான்னு பார்க்கறேன்... ஆனா நீங்க அவனுக்கு எதுவும் உறுதி கொடுக்காதீங்க... இந்த வாரக் கடைசில சொல்றோம்ன்னு சொல்லுங்க....”, தாளாளர் பேசிவிட்டு அலைபேசியை வைத்து யோசனையில் மூழ்கினார்...
“மதி சார்... நம்ம வச்ச குறி பக்காவா வேலை செய்யுது...”
“ஹ்ம்ம் ஆமாம்... அந்த வைரம் என்னவா இருக்கும்...”
“ஒரு வேளை நிஜமாவே வைரம்தான் கடத்தறாங்களோ சார்...”
“இவங்களுக்கெல்லாம் அது ஜுஜுபி மேட்டர் சக்தி... இது கண்டிப்பா வேற ஏதோதான்... அது என்னன்னு கண்டுபிடிக்கணும்...”
அன்று இரவில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பதினைந்து பேர் மாயமாக மறைந்திருந்தார்கள்....
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}