கொஞ்ச நேரம் பார்த்து இருந்த ராத தம்பி அம்மாவை மேல கூட்டிட்டு வாங்க வெய்யில் நேரத்தில் விலையாடலாம் இப்ப இருட்டிடுச்சி சலி பிடிச்சிட போகுது என்று கூர.
அலேக்காக அவளை கையில் தூக்கியவண் கல் மேஜை மீது அமர வைத்தான். கால்களை துடைக்க துணித்தேட நக்ஷ் கொண்டு வந்து கொடுத்தான். நல்லா தான் இருந்தது நீ சிரிப்பதை வேடிக்கை பார்க அதர்காக இப்படியா தண்ணீர்ரில் விலையாடுவாய் என்று சில்லிட்டு இருந்த கால்களை தொட்டு பார்த்து அதட்டினான்.
இல்ல நக்ஷ் நீங்க விலையாடிப் பாருங்க ஜாலியா இருக்கு...
அது சரி... டேய் அண்ணா உன் பொண்டாடிக்கு இங்க இருக்க க்லைமெட் ஒத்துக்க மாடெங்குது இவ இப்படி ஆட்டம் போடுறா பார்.
மித்தூ கையில் எதையோ கொண்டு வருவதை பார்த்த பௌவ் ஈஷூமாமா அவன் எனக்கு ஊசி போட வரான் என்று அவனை இருக்கி பிடித்தபடி கத்த பையந்து விட்டான் ஈஷ்வர். பின்பு பார்த்தால் அது நீலகிரிதையலம், பௌவ்வைப் பார்த்து சிரித்தவன் இப்ப ஒழுங்க தேய்துக்கலனா தான் ஊசி போடுவேன் என்று மிரட்டினான்.
போடா என்று இவள் அவனுடன் சண்டைக்கு ஆயித்தம்மாக கணி அனைவரையும் உள்ளே வரும்படி கூரிவிட்டு நீ அவ காளை நல்லா தொடச்சிட்டு தையலம் தெய்த்து விடு என்று இடத்தை காலி செய்து விட்டனர்.
இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஆரம்ப கட்டத்தில் ஒரு பூந்தோட்டமாக தான் இருக்கும். காதலிக்க ஆரமித்து பிறகு அந்த பூந்தோட்டம் ஒரு நந்தவனமாக மாறும் என்பதே உண்மை. அந்த நந்தவனத்தில் உள்ள காதல் பூக்கள் ஒவ்வொன்றும் காதலுக்காக மட்டுமே பூக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் சில காரணங்களால சிலரது வாழ்வில் அந்த பூந்தோட்டம் ஒரு பாலைவனமாகவும் மாறுகிறது.
நந்தவனத்தில் வாழ்ந்தவனுக்கு பாலைவனத்தில் வாழ்வது எவ்வளவு கடினமோ அதை விட பன் மடங்கு கடினமானது இந்த காதல் பிரிவு. அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் அடக்க முடியாத வலி. அந்த வலியில் இருக்கும் ஒருவனுக்கு அனைத்தும் மாயையாய் தெரியும். அவன் காதலே அவனை கொள்வது போல கூட தோன்றும். அந்த காதல் மாயையில் இருந்து வெளிவர அவனுக்கு புது சக்தி வேண்டும் என்பதே உண்மை. ஏங்க அது மாயைனு பல பேர் சொன்னாலும் நம்ம அதை நிருத்த முடியாது அது தான் ஆண்டவன் படைப்புங்க.
இதுலாம் உண்மை உண்மைனு கணவனம் மனைவியும் மாறி மாறி அவங்கவங்க மனசுல பதியவைத்துக்றாங்க.