தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 34 - ஜெய்
Friends,
Hope all of you are staying safe…. கணவரின் work from home மற்றும் பிள்ளைகளின் home learning மூச்சு விட நேரமில்லை.... இவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு, பானம் என்று மாற்றி மாற்றி பரிமாறுவதிலேயே முக்கால்வாசி நேரம் காலி... அதுவும் ஒரு ஒருவருக்கும் வேறு வேறு நேரங்களில் உணவு இடைவேளை... தவிர வீடு சுத்தப்படுத்தும் வேலை என்று பின்னி கட்டுகிறது... நிறைய நேரம் இருந்தாலே சிறிய அப்டேட் மட்டுமே அடிக்கும் நான் நேரமே இல்லை என்றால்.... இப்போ எதுக்கு இம்புட்டு விளக்கம்ன்னு நீங்க கேட்க வருவது புரிகிறது... இந்த வாரத்துடன் முற்றும் போட நினைத்தேன் ஆனால் சத்தியமாக இதற்கு மேல் டைப் செய்ய தெம்பில்லை.... சோ Next week கடைசி அத்தியாயம் பதிவிடுகிறேன்.... Take care and be safe friends….
மதியும், சந்திரனும் மாறி மாறி நரேந்திரனின் கல்லூரியில் நடக்கும் பித்தலாட்டங்களை ஒவ்வொன்றாக விளக்க பத்திரிக்கையாளர்கள் தலை சுற்றி போய் அமர்ந்திருந்தார்கள்...
இதைவிட பெரிதாக அடுத்து என்ன குண்டு வரப்போகிறதோ என்று சற்று அதிர்ச்சியுடனே கவனிக்க ஆரம்பித்தார்கள்....
“நாங்க இவரின் ஒவ்வொரு கல்லூரியிலும், மருத்துவமனையிலும் எங்க கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம்.... இவர்களின் மருத்துவக் கல்லூரி பற்றி உங்க எல்லாருக்குமே தெரிந்திருக்கும்... இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பில் முன்னணியில் உள்ள கல்லூரி... அங்கு சேர மாணவ மாணவிகளிடையே கடும் போட்டியே நிகழ்வதும் உங்களுக்குத் தெரியும்....
அதுவும் சென்னையிலிருக்கும் கல்லூரி மிகப்பெரியது.... இங்கு மருத்துவப் படிப்பில் இல்லாத துறைகளே இல்லை.... அது மட்டும் அல்லாமல் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவில் இங்கு இருக்கும் மருத்துவ மனையில்தான் அதிக அளவில் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றன..... அதனால் இங்குதான் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.... எங்களின் கண்காணிப்பும் இங்கு அதிகமாக இருந்தது...
அப்படி தீவிர கண்காணிப்பில் இருந்தபோதுதான் நாங்கள் வேவு பார்க்க அனுப்பிய மாணவி அங்கு ஒரு பரிசோதனைக் கூடம் இருப்பதை கண்டுபிடித்தாள்.....
சாதாரணமாக பரிசோதனைக் கூடம் கல்லூரியின் உள்ளேயோ அல்லது தனிக்கட்டிடமாகவோ இருக்கும்.... இங்கு அப்படி ஒரு லேப் இருக்கிறது அவர்களின் மருத்துவக் கல்லூரியின் உள்ளேயே,,,, அதைத் தவிர நிலத்தடியில் ஒரு பரிசோதனைக் கூடம் ஒன்றை அவள் கண்டுபிடித்தாள்...
சாதாரணமாக வெளியிலிருந்து பார்த்தால் அப்படி ஒரு இடம் இருப்பதே தெரியாது.... இத்ததனை ரகசியமான இடத்தில் நடப்பது என்னவென்று தெரிந்தால் நீங்களே அந்த நரேந்திரனை கொன்று விடுவீர்கள்....
உறுப்புத் திருட்டு.... அதுவும் உரிரோடிருக்கும் மனிதர்களைக் கொன்று... அது தவிர வெளிநாட்டில் கண்டுபிடிக்கும் மருந்துகளுக்கு பரிசோதனை எலிகளாக மனிதர்களை பயன்படுத்த அனுப்புவது... அதற்கு மனிதர்களை தயார்படுத்துவது...
அதிர்ச்சியாக இருக்கிறது இல்லை.... பொதுவாக மூளை சாவு ஏற்பட்ட மனிதடமிருந்து நாம் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பிற உறுப்புகளை மற்றவர்க்கு பொறுத்த மருத்துவர்கள் எடுப்பார்கள்...
இங்கு அந்த லேபில் அதையே உயிரோடு இருக்கும் மனிதர்களை கொன்று எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... இதற்கு அவர்கள் தேர்ந்தெடுப்பது ரோட்டோரத்தில் இருக்கும் மக்களை,