தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 26 - Chillzee Story
இனியவனுடைய கேள்விக்கு சுந்தரி ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
“புள்ளி வச்சு கோலம் போட்ட சுந்தரி, இப்போ பதில் சொல்ல போறீயா இல்லையா?” – மிரட்டுவதுப் போலக் கேட்டான் இனியவன்.
“நீங்க இரண்டுப் பேரும் நல்ல ஜோடியா இருக்கீங்கன்னு தோணிச்சு. நீங்க கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்ட பொண்ணு மாதிரியே அவங்க இருக்காங்கன்னும் தோணிச்சு ” – சுந்தரி உண்மையை சொன்னாள்.
இனியவன் அவளை விட்டு விலகிப் படுத்தான்.
“உனக்கும் அப்படியா தோணிச்சு?” – இனியவன்.
காதில் கேட்டதை நம்ப முடியாமல் விழித்தாள் சுந்தரி.
“நீயே மனசு விட்டு பேசும் போது, உன் கிட்ட சொல்றதுக்கு என்ன சுந்தரி. அந்த போட்டோல
...
This story is now available on Chillzee KiMo.
...
களில் யோசனையிலேயே இருந்தான். வேலை வேறு அதிகமாக இருந்ததுப் போலும். எப்போதும் லேப்டாப்பும் கையுமாகவே இருந்தான்.
“ஏன் சுந்தரி இரண்டு மூணு நாளா உன் முகம் எப்படியோ இருக்கு? இனியா கூட சண்டைப்