Page 1 of 25
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 13 - சசிரேகா
தறி நெய்யத் தொடங்கியதில் இருந்து ஹர்ஷா கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லிக் கொண்டே வந்ததால் அலுப்பு தெரியாமல் வேலை தொய்வில்லாமல் நடந்துக் கொண்டிருந்தது.
முக்கால் வாசி முடிந்த நிலையில் ஹர்ஷாவிற்கு தானாக உறக்கம் வரவே அவளோ வேண்டுமென்றே தூங்கக் கூடாதென முடிவெடுத்து கஷ்டப்பட்டு கண் விழித்துக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்த சூர்யாவோ
”நீ போய் தூங்கு ராஜகுமாரி” என அன்பாகச் சொல்ல அவளோ
”இல்லை நான் இருக்கேன், இன்னும் கொஞ்சம்தானே பார்த்துட்டே போறேன்”
”விளையாடாத, இப்பவே பொழ ... ி வா என்பது போல் அழைக்க அவளுக்கு வியப்பாக இருந்தது
”நானா” என ஆச்சர்யமாக கேட்டாள் ”ப்ச் வா“ என்றான் மெதுவான குரலில்
This story is now available on Chillzee KiMo.
...