தொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D
யார் அந்த பெண்? திவேஷிடம் கொடுத்த மொபைல் கவர் இவள் கையில் எப்படி வந்தது? அவள் வைத்திருந்தது திவேஷின் போனா? அதை திவேஷிடம் இருந்து திருடி விட்டாளா? திவேஷ் மான்செஸ்டர் அல்லவா போயிருக்கிறான்??? நேற்று இரவு கூட பூர்வியிடம் அவனுடைய நம்பரில் பேசினானே. அதற்குப் பிறகு இவள் போனை திருடி விட்டு லண்டனுக்கு வந்து விட்டாளா?
விடை தெரியாத கேள்விகள் அடுக்கிக் கொண்டே போனது.
எல்லாவற்றுக்கும் தர்க்க காரணம் இருக்க வேண்டும். திவேஷிடம் பேச முடிந்தால் எல்லாம் தெளிவாகி விடும்.
திவேஷ் அவனாகவே மொபைல் கவரை அந்த பெண்ணிடம் கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. அவன் பூர்வி மனம் கஷ்டப் படுவது மாதிரி எதையுமே செய்ய மாட்டான
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பி வந்தது. அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“பூ நானும் உன்னை மிஸ் செய்தேன்”
திவேஷ் காதலுடன் சொன்னான்.
“நேத்து எத்தனை தடவை போன் செஞ்சேன். ஏன் நீங்க போனை எடுக்கலை?”