“ ஆமாமாம்! மறந்தே போச்சுஒரு கோடி! தலைவா! என்கையெழுத்தை நீங்க எங்கேஎங்கே எத்தனை தடவைபோடச் சொன்னாலும் ஏதும்பேசாம போடறேன், என்னைவிட்டுடுங்க, நான் வீட்டுக்குப்போறேன், தூக்கம்செமையாவருது......ஆ.....வ்....”
“ சீரியஸா இருப்போம்......ஆங்....முன்பணம் பற்றி பேசிமுடிவு பண்ணினோம்.....”
“ பேசினோம், முடிவுக்குவரலே! அவரு, ஐம்பது லட்சம்கேட்டாரு, நீங்க பத்துன்னுசொன்னீங்க, இன்னும் முடிவுஎட்டலே.......”
“ சரி, மற்றவங்க சொல்லுங்க!ஒரு விஷயத்தை மனசிலேவச்சிண்டு பேசுங்க! எப்பவும்இந்த டீலிலிருந்து வெளிவரநமக்கு எந்தப் பிரச்னையும்இல்லாமல் இருந்தால் தான்,நல்லது. ஐம்பது லட்சத்தைவாங்கினா, அப்படியேவாவச்சிருப்போம்? செலவு பண்ணிடுவோம். அப்புறம்,பணத்தை திருப்பித் தரும்சூழ்நிலை வந்தால், அந்தபணத்தை புரட்டமுடியுமா?நான்தான் அட்வான்ஸ் பணம்பத்து லட்சம் போதும்னுசொல்றேன், வியாபாரி ஏதும்பேசலே, ஏன்னா அவரிடம்கேட்கவேயில்லை. நீங்கவற்புறுத்தினால், பத்தைஇருபதா உயர்த்தி கேட்கத்தயாராயிருக்கேன்......”
“ வெல் செட் தலைவா! அதுதான் கரெக்ட்!”
“ மற்றவங்க என்ன சொல்லப்போறாங்கன்னு தெரிந்தபிறகுமுடிவு எடுப்போம்......”
“ நிரஞ்சன்! இப்படி நிறையபிரச்னைகள் அப்பப்போ வரும். ஒவ்வொன்றுக்கும்இருபதுபேரும் கூடி முடிவுஎடுக்கமுடியாது. அதனாலேஒரு கமிட்டியை தேர்ந்துஎடுத்து அதன் முடிவுகளைமற்றவங்க ஏற்போம்......”
“ ரொம்ப நல்ல யோசனை!அந்த கமிட்டியிலே ஐந்துபேர்இருக்கட்டும். அதற்கும்நிரஞ்சன்தான் தலைவர்!ஏதாவது கருத்து வேற்றுமைவந்தால், தலைவர் கருத்தேஇறுதி முடிவு!........”
“ அந்தக் கமிட்டியில் உள்ளஐந்து பேரும் உள்ளூரிலேஇருப்பவங்களாக இருந்தால்சௌகரியமாயிருக்கும்.....”
“ நிரஞ்சன்! என்ன, ஒண்ணும்பேசாம இருக்கீங்க, இந்தயோசனை உங்களுக்குப்பிடிக்கலையா?”
“ தலைவா! உன்மீது எங்கஎல்லார்க்கும் முழு நம்பிக்கைஇருக்கு, ஆனால் நீ தனியாமுடிவு எடுக்கமுடியாம கஷ்டப்படுவே, அதனாலே.....”
“ எனக்கொண்ணும் கஷ்டம்இல்லே, உங்களை போனிலேகலந்துபேசி முடிவு எடுக்கமுடியும். இப்ப நிறைய வசதிவந்தாச்சு! பெரிய பெரியமாநாடுகளே விஷுவலாதான்நடக்குது....நீங்க டி.வி.யிலேபார்த்திருப்பீங்களே, டில்லியிலிருந்து பிரதமர், எல்லாமுதலமைச்சர்களோடும்கலந்து பேசுவார். பிறகு அவர்முடிவு எடுப்பார். அதுபோல,நானும் செய்கிறேன்......"