தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 03 - ஜெபமலர்
வேலைக்கு சென்று வருவதும் புத்தகங்கள் வாசிப்பது என்றும் அவள் நாட்கள் சுவாரஸ்யமாக இல்லா விட்டாலும் அமைதியாக நகர்ந்தது.
ஆபிஸில் அனைத்து வேலைகளையும் ஜனனி கற்று தேர்ந்து இருந்தாள். அன்று சற்று வேலை குறைவாக இருந்தது. கேப்பிடீரியா சென்று டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற ஸ்வீனாவை அழைக்க அவள் கேபினுக்கு சென்றாள் ஜனனி.
ஸ்வீனா ஒரு குழந்தையுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருப்பதை பார்த்தவள் ஆச்சரியத்துடன், ஹாய் ஸ்வீனா... யார் இந்த குட்டி தேவதை என்று சொல்லி கொண்டே அந்த பட்டுக் குட்டியின் கன்னத்தை மெதுவாக கிள்ளி முத்தம் கொடுத்தாள்.
ஸ்வீனா, பதில் சொல்வதற்குள் நீங்க அம்மா மாதிரியே அழகா இருக்கீங்க என்று சொல்லிய குழந்தை அவள் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தது.
சாப்பிட்டு கொண்டு இருந்த சாப்பாடு உதடுகளில் ஒட்டி இருந்ததோடு ஜனனியின் கன்னங்களிலும் ஒட்டி கொண்டது. ஆனால் அதை துடைத்து கொள்ள விரைந்த கையை அந்த குழந்தையின் பாசமான பேச்சு தடுத்து விட்டது.
அவர்களை பார்த்து கொண்டு இருந்த ஸ்வீனாக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜனனி.... இவள் என் அண்ணா பொண்ணு. யாரிடமும் பழக மாட்டாள். ஆனால் உன்னிடம் ஒட்டி கொண்டாளே என்றாள்.
ஸ்வீனாவிற்கு பதிலாக புன்சிரிப்புடன் தலை அசைத்தவள் குட்டிமா... உங்கள் பெயர் என்ன என்றாள் ஜனனி..
ஐ யம் தன்சிகா...
ஸ்வீட் நேம் தனு குட்டி என்றாள் ஜனனி.
முத்து போன்ற வெண்பற்கள் தெரிய அழகாக சிரித்தாள் தன்சிகா.
சானு உங்க பெயரும் அழகா இருக்கு என்று தன் மழழை மொழியில் சொல்லி சிரித்தாள் குட்டி தேவதை.
ஆமா என் நேம் ஜனனி என்று உனக்கு எப்படி தெரியும்.
இப்போ தான சுவி அத்தை சொன்னாங்க.. ஐ யம் ப்ரிலியண்ட் குட் கேர்ள் என்று சொல்லி ஜனனியை கட்டிக் கொண்டாள் தன்சிகா.
நீ ப்ரிலியண்ட் மட்டுமில்லை.. ப்யூட்டி புல் குட் கேர்ள் தனு குட்டி என்று சொல்லி மென்மையாக முத்தம் வைத்தாள் ஜனனி.
அப்பா மட்டும் தான் என்னை தனு குட்டி என்று கூப்பிடுவாங்க.. அதனால் நான் யாரையும் அப்படி கூப்பிட விட மாட்டேன். ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால்