வீட்டிற்கு வந்து தன்னுடைய திங்ஸை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருந்தாலும் அவள் மனமோ அந்த "ஜனா" என்ற பெயரிலேயே நின்றுவிட்டது.
சாப்பிட மனமும் இல்லாததால் அப்படியே படுக்கையில் விழுந்து விட்டாள் ஜனனி. ஏனோ உறக்கமும் அவளை தழுவிக் கொள்ள மறுத்தது.
புரண்டு புரண்டு படுத்தவளுக்கு ஏனோ இந்த உலகமே வெறுப்பாய் தோன்றியது. சந்தியாவிற்கு அழைத்துப் பேசலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் ஏனோ அவளிடமும் பேச அவளது மனம் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனால் படுக்கையிலேயே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் எப்படியாவது உறங்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளது முயற்சியை கலைக்கும் விதமாக அவருடைய அலைபேசி ஒலித்தது.
சுவரில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தவள் அழைப்பது யார் என்று பார்க்காமலே அழைக்கும் நபரை தெரிந்து கொண்டாள். ஏனோ எடுக்க மனம் வராமல் மீண்டும் தன் படுக்கையிலே சுருண்டு கொண்டாள் ஜனனி.
ஆனால் அழைப்போ நிற்பதாக தெரியவில்லை.மீண்டும் மீண்டும் அவளது அழைப்பேசி அழைத்துக் கொண்டே இருந்தது.
பொறுமை இழந்தவள் அழைப்பது யார் என்று பார்க்காமலேயே இப்போ உனக்கு என்ன தான் வேணும் சந்தியா, அழைப்பை ஏற்கவில்லை என்றால் விட மாட்டாயா என்று பொரிந்து தள்ளினாள்.
சாரி... சாரி... சாரி... என்ற ஆணின் குரலில் நினைவிற்கு வந்தவள் அழைத்திருப்பது யார் என்று அறிய தன் அலைபேசியின் திரையை பார்த்தாள்.
அஸ்விட் என்ற பெயரைப் பார்த்ததும் சாரி சொல்வது ஜனனி முறையானது..
சாரி சார்... நானும் இந்த நேரத்தில் அழைப்பது என் தோழி சந்தியாவாக தான் இருக்கும் என்று நினைத்து யார் என்று பார்க்காமலேயே பதில் சொல்லிவிட்டேன். ஆனால்... நீங்கள் இந்த நேரத்தில் எப்படி என்று ஜனனி கேட்க அஸ்விட் சொன்னதை கேட்டதும் திகைத்துப் போனாள். இன்னும் அரை மணி நேரத்துக்குள் அங்கு வந்து விடுவேன் என்று சொன்னவள் வேகமாக எழுந்து தன் முகத்தை அலம்பிக்கொண்டு ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு தன் டூவீலரை எடுத்துக் கொண்டு பறந்தாள்.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.