செட்டியார் ஊரிலே இருக்கிறாரான்னு தெரிஞ்சிக்கிறேன். ஊரிலே இருந்தார்னா, நாளைக்கே நாம ரெண்டு பேரும் திருச்சி போய் சந்திக்க முயற்சி செய்வோம். ரெண்டு, மூணு நாள் ஆனாலும் காத்திருந்து பார்த்துடுவோம்...."
" சரி, அந்த சாம்புவுக்கு போன்பண்ணி கேள், உடனே! இந்தா போன்!"
" உங்க போன் எதுக்கு? என் போனிலேயே பேசறேன். ஆனா, அவரு கடை நம்பர் வீட்டிலேதான் இருக்கு, நான் வீட்டுக்குப் போய் பேசிட்டு உங்களுக்கு போன் பண்றேன்......."
" சரி, போய், பேசின பிறகு உடனே எனக்கு தகவல் தெரிவி!"
பிரபா கிளம்பியதும், சேகர் தந்தையை பார்த்தான்.
" புரியுது சேகர்! பிரபா பொய் சொல்றான்னு! நம்ம எதிரிலே பேசக்கூடாதுன்னு தந்திரமா வீட்டிலேதான் போன் நம்பர் இருக்குன்னு பொய் சொல்றான். ...... விட்டுத்தான் பிடிக்கணும்!"
சிறிது நேரத்தில், பிரபா விடமிருந்து போன் வந்தது.
" மேனேஜர் சாம்புவிடம் பேசிட்டேன். செட்டியார் திருச்சியிலே இருக்காராம். அவரைப் பார்க்க நம்மை வரச் சொல்லிட்டாரு. இன்னிக்கி இரவே ரயில்லே கிளம்பி, நாளை காலையிலே அவரை பார்த்துடுவோம். நல்லகாலம் பிறந்துடுச்சி! நீங்க பெரிய கோடீஸ்வரன் ஆகப்போறீங்க நிச்சயமா......."
" உனக்கும்தான் மூணு கோடி ரூபாய் கிடைக்கப் போகுது. கங்கிராட்ஸ்!"
நிரஞ்சன் நிறைந்த மனதுடன் அன்றிரவே கிளம்பி மறுநாள் காலை திருச்சி அடைந்தார்.
தொடரும்
Next episode will be published on 13th October. This series is updated weekly on Tuesday mornings.