(Reading time: 39 - 77 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"இப்போதான் குழந்தை வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம்அதுக்குள்ள குழந்தையா…" என்று சத்யன் சிரித்தான்.

குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்டு… உடை மாற்றிஹக்கீஸ் மாற்றிதாலாட்டு பாடி.. என பிஸியாக இருந்த மீராவின் தாய்மை தோற்றம் அவனுக்கு பிடித்து போனதுகாதல்கல்யாணம்…  ஹாப்பி லைஃப் என்று மட்டுமே இருந்த சத்யனுக்கு  ஒரு குழந்தையும் வேண்டும் என்று தோன்றியது.

மறுநாள் மின்னுவை அவளுடைய பெற்றோருடன் போலிஸ் சேர்த்து வைத்து விட்டது. பந்தனம்திட்டாவை சேர்ந்த சுற்றுலா பயணி தன்னுடைய குழந்தையை பூங்காவில் தொலைத்தது தெரியாமல் வேறு சில இடங்களில் தேடி விட்டு போலிஸிற்கு போனபோதுதான் விஷயம் புரிந்தது.

மின்னுவை அவளுடைய பெற்றோரிடம் சேர்ப்பித்து விட்டு வந்தபோது மீரா ரொம்பவும் அழுதாள். அப்போது சொன்னாள்.

"நமக்குனு ஒரு மின்னுமோள் இருக்க வேண்டும் சத்தி…"

அதுதான் அவனுக்கும் தோன்றியது. குழந்தை என்பது ஆனந்த பொக்கிஷம்அதை நேசிக்க தெரிந்தவர்களுக்கு தேவதையின் தரிசனம் கிடைக்கும்எச்சில் முத்தங்கள் இனிய வரம்கொஞ்சு மொழி தாலாட்டு பாடலாகும்இன்னும் நிறைய தெரிந்து கொண்டான். அத்தனையும் 'மின்னுமோள்' ஒரே நாளில் கற்று தந்தது.

குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் கொண்டு வந்த அந்த குட்டி தேவதை போலவே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை  பிறந்தாள். அவளை மனுகுட்டி என்று அழைத்தாலும்ரொம்பவும் பிரியமாக 'மின்னு மோள்' என்றும் இருவரும் கொஞ்சுவார்கள். இதுதான் மின்னு மோளின் ரகசியம்

இந்த பெயரை சொல்லி கொஞ்சுவதென்றால்  மீராவிற்கு பழைய நினைவுகள் வந்து விட்டது என்றுதானே அர்த்தம்ஒருவேளை அவள் நடிக்கிறாளோ

யோசித்து பார்த்தால்… மருத்துவமனையில் ரேச்சலின் நடத்தையில் ஒரு பணிவு அமைதி தெரிந்தது. மயிலின் நளினம்அது மீராவிற்கே உரியது. ரேச்சலுடைய நடத்தையில் மானின் துள்ளல் தெரியும். அப்போ அது மீராதான்..

ம்… அவனுடைய ஊகம் சரியென்றால்…  அவள் ஏன் அப்படி நடிக்க வேண்டும் என்ற கேள்வி வந்தது. மீராவிற்கு அவன்மீது எந்த கோபமும் இல்லைஅந்த ஜெமி தந்த ஆடியோவின்படி அவள் சத்யனுடன் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்

அவளுக்கு பழைய நினைவுகள் வந்திருந்தால்… கண் விழிக்கவும் ஓடி வந்து அவனை கட்டிக்

21 comments

  • Interesting story.. starting laye Rachel meera 2perum ontru entru therinthalum kathaiyai neengal kondu pona vitham tompa super... Ella charactersum manathil pathinthathu thani sirappu... Hero Hermione matum alla Ella charactersum tompa super.. rompave super... Nija kunathai maraithu vitu meeravai nintravaluku unmai gunathai katta Rachel character kidaithathu good... Really good one... :clap: good luck for ur next story

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.