(Reading time: 39 - 77 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

கொண்டிருக்க வேண்டும்…. அப்படி இல்லையே…  இந்த அம்னீசியா நாடகம் ஏன் தொடர்கிறது…?

ரேச்சல் அவனை கடந்தபோது முகம் திருப்பியது… கோபத்தில் சிவந்த காது மடல்கள்.. இவை ஏன்?. அவன் மீது தீரா கோபம் கொண்டது ரேச்சல்தானே

அப்படியெனில் அவளுக்கு கன்ட்டின்யஸ் அம்னீசியா வந்திருக்குமோ… பழைய நினைவுகளும் தற்போதைய நினைவுகளும் சேர்ந்து வந்து விட்டனவோ… 

அம்மாடியோ… மீராவையும் அவன் சீண்டி விட்டது போல ஆகி விடும்அதிலும் அந்த பசுமை குடில்  அத்தியாயம் கண்டத்திற்குரியது

பேச்சா பேசினான்… நாக்கில்  முன்வினை ஊழ் என்பார்களே…  அது வந்து நர்த்தனமாடி விட்டதுசண்டைகாரிவாயாடிவச்சு வாழ முடியாது…! என்னமா பேசிட்டான்!

 அடடா.. கூடை மண்ணை  தலையில் கொட்டியிருந்தாலும் தட்டி விட்டால் போயிருக்கும்கூடை நெருப்பை  அள்ளி தன் தலையில் தானே போட்டுக் கொண்டானே...

இப்போது அவன் என்ன செய்வது?. ஏதாவது செய்து மீராவின் மென்மையான இதயத்தை திறப்பதா அல்லது ரேச்சலின் கோபத்தை ஆற்றுவதா

மீராவை அவனால் எளிதாக வழிக்கு கொண்டு வர முடியும்.   சற்று முகம் வாடி லேசாக இருமிதலைவலிக்கிறது என்று சொன்னாலோ அல்லது கொஞ்சம் பெரிய கட்டு ஒன்றை கையில் போட்டு கொண்டு 'கன்ஸ்ட்ரக்ஸன் சைட்ல அடிபட்டுருச்சு' என்றுலோஅவள் தாங்க மாட்டாள். அவன் மீது அவளுக்கு (இன்னமும்) இருக்கும் காதலை ஆயுதமாக்கலாம். அவள் காதலை எதிர்த்து  போராட மாட்டாள். ஆனால் அது அவளுடைய பலவீனமான பக்கம்அதை வைத்து ஜெயிக்க கூடாது..

ரேச்சலிடம் நேர்மையாக போராடி மீராவை வெளிக் கொண்டு வர வேண்டும். அவன் எதனால் அப்படி நடந்து கொண்டான் என்பதை விளக்க வேண்டும். ஆனால் அவன் விளக்கு விளக்கு என்று விளக்கும்போது அவள் காது கொடுத்து கேட்க வேண்டுமேஅதுக்கு ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும்.

ஆமாம்… இவ்வளவு கோபம் அவன் மீது ரேச்சலுக்கு ஏன் வர வேண்டும். பிடிக்காததை ஒருவர் பேசம்போது வரும் கோபத்திற்கு அடிப்படை காரணம் வெறுப்பாக இருக்கும்அதற்கு பதிலுக்கு பதில் கடுமையாக பேசி கணக்கை  தீர்த்து விட்டிருக்கலாம்

இது வேறு…. ம்எதிர்பார்த்து ஏமாந்தால் கோபம் வரும். அவன் எந்த விதத்தில் அவளை ஏமாற்றினானாம்…?. லைட்டா ஒரு ரொமான்ட்டிக் ட்ராக் வருதோஅவளுக்கு சத்யன் மீது சாஃப்ட் கார்னர் இருந்துஅவன் இப்படி பேசியதை கேட்டு ஒரு வேதனையான கோபம் வருந்திருக்குமோ

21 comments

  • Interesting story.. starting laye Rachel meera 2perum ontru entru therinthalum kathaiyai neengal kondu pona vitham tompa super... Ella charactersum manathil pathinthathu thani sirappu... Hero Hermione matum alla Ella charactersum tompa super.. rompave super... Nija kunathai maraithu vitu meeravai nintravaluku unmai gunathai katta Rachel character kidaithathu good... Really good one... :clap: good luck for ur next story

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.