ஒருவேளை என்னோட உள்மனசு அவனைக் கவனிச்சிட்டே தான் இருந்ததோ என்னவோ? அன்னிக்கு அவன் ப்ரொபோஸ் பண்ணதை உன்கிட்ட சொன்னப்போ, நீ தானே சொன்ன, அதெப்படி எந்த ஒரு பையன் ஒரு பொண்ணைப் பார்த்தாலோ,விரும்பினாலோ, அது மத்தவங்களுக்குத் தெரியறதுக்கு முன்னாடி, முதலில் அந்த பொண்ணுக்குத் தான் தெரியும்னு சொன்னியே. மேலோட்டமா எனக்குத் தெரியாமல் இருந்தாலும், உள்ளுர அந்த உணர்வு எனக்கு இருந்ததோ என்னவோ.!” அடைமழையாய் வார்த்தைகளைப் பொழிந்து என்னன்னவோ சொல்லும் ரம்யாவைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.
“அதுவுமில்லாமல், அவன் எப்போதும் என்கிட்டே பேச முயற்சி பண்ணிட்டே தான் இருந்தான். நான் அதைக் கண்டுக்காத மாதிரி இருந்தேன். இப்போ அவன் என்கிட்ட காதலிக்கிறதா சொல்லிட்டு பேசாமல் இருக்கிறான். இப்போ என்னால அதை ஈசியா ஏத்துக்க முடியல. ஒருவேளை,அவன் என்கிட்டே தன்னோட காதலைச் சொல்லிட்டா அவன் மனசு பாரம் குறைஞ்சிடும் தானே என்கிட்டே சொல்லியிருக்கான். அதேமாதிரி என் மனசுல இருக்கிற பாரம் போகணும்னா அவன் கிட்டே என் மனசில இருக்கிற எல்லாத்தையும் பேசப்போறேன்!
எப்போ?
சீக்கிரமே! அவன் காதலை சொன்ன சூட்டோடு மறுத்துட்டேன்.அதனால் அவன் இதை ஆறப் போட்டிருக்கானா, இல்லை கண்ணீர் விட்டு அணைச்சுட்டானான்னு எனக்குத் தெரியல! அவன் மனசில இருந்து லேசில என்னை எடுக்க முடியாதுன்னு நான் நம்புறேன். அதே தான் எனக்கும். ஆனால் நீ மட்டும் ஒரு உதவி பண்ணனும். எனக்கு நல்லது பண்றதா நினைச்சிட்டு இந்த விஷயத்தை அம்மா, அப்பா கிட்ட மட்டும் போட்டுக் கொடுத்துராத சத்யா
இல்ல ரம்யா அப்படிலாம் நான் எதுவும் பண்ணல. நீ சந்தோஷமா இருந்தால் அதுவே எனக்குப் போதும்டி!. எதையும் யோசிச்சுப் பண்ணு! என்றவள் அவளின் கையைப் பிடித்து , சரி வா! கீழே அம்மா பொங்கல் சாப்பிட உன்னையக் கூட்டிட்டு வர சொன்னாங்க.
எனக்கு பொங்கலும் வேணாம் வேற எதுவும் வேணாம்! தினேஷ்கிட்ட பேசறது தான் வேணும்!
லூஸு! நீ தான் அவன்கிட்ட பேசப்போறேன்னு முடிவெடுத்துட்டேல! அதைக் கொண்டாட ஸ்வீட் பொங்கல் சாப்பிடலாம் வா ! நீ இப்படியே சாப்பிடாம ஒல்லிக்குச்சி மாதிரி இருக்கிறதை அவன் கண்டால் உன்னைப் புடிக்கலன்னு சொல்லிடப்போறான். அம்மாவும் உன்னைப் பத்தி சந்தேகப்பட்டுக் கேள்வியாக் கேட்பாங்க.
சரி! சரி! சாப்பிட வர்றேன்.
கீழே வந்ததும், அம்மாவிடம் ரம்யாவிற்கு வயிற்றுவலி சரியாகிவிட்டது,எனவே இருவரும்