(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

செஞ்சே?...உனக்கு ஏதாச்சும் கிறுக்குப் பிடிச்சிடுச்சா?” என்று எடுத்த எடுப்பிலேயே கடுமையான குரலில் கேட்க,

ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள், “அ...க்...கா!”

“அதான் உனக்கு விருப்பமில்லை”ன்னு சொல்லிட்டியல்ல?...அத்தோட நிறுத்திக்க வேண்டியதுதானே?...அதை விட்டுட்டு கொஞ்சம் கூட நாகரீகமில்லாம...ச்சை...படிச்சவளா நீ?”

சுலோச்சனா பேசப் பேச அர்ச்சனாவிற்குள் கோபக் கனல் மூண்டது.

“ச்சு...சும்மா நிறுத்துக்கா...நான் யாருக்கான இதைச் செய்தேன்?...எனக்காகவா?...ம்ஹூம்...உனக்காக...உன்னை அவன் அவமானப்படுத்தியதுக்கு பதிலடி குடுக்கத்தான் நான் அவனை அவமானப்படுத்தினேன்!...ஆனா நீ என்னடான்னா...என்னையே திட்டறியே?”

“திட்டாம?...உன்னைக் கொஞ்சுவாங்களா?...ஏதோ குடும்பத்துக்குள்ளார இருந்த நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்சிருந்த கேவலத்தை பொது இடத்துல வெச்சுப் பேசி...எல்லோருக்கும் தெரிய வெச்சு...உன்னோட அக்கா ஒரு “தள்ளுபடிக் கேசு”ன்னு தம்பட்டம் அடிச்சிட்டு வந்திருக்கியே...இது எனக்கு அவமானமில்லையா?...இது எனக்குக் கேவலமில்லையா?”

அப்படியொரு கோணம் இருப்பதை அப்போதுதான் யோசித்தாள் அர்ச்சனா.

அன்று இரவு முழுவதும் உறங்க விடாமல் இந்த உணர்வு அவளை வாட்டியெடுத்தது. “ச்சே!...அம்மா...அப்பா...அக்கா....இன்னும் அந்த தரகர்...அந்த மாப்பிள்ளை...இப்படி எல்லோரையுமே சங்கடப்படுத்திட்ட இந்த விஷயத்தை நான் செய்திருக்கக் கூடாதோ?...என் ஒருத்தியோட ஆங்காரம் தணியணும் என்பதற்காக இத்தனை பேரோட வெறுப்பைச் சம்பாதிச்சுக்கிட்டேனே!”

விடிய விடிய உறங்காமல் யோசித்தபடியே கிடந்தவள், அதிகாலை நேரத்தில் அவளையுமறியாமல் உறங்கிப் போனாள்.

தொடரும்...

Next episode will be published on 19th Dec. This series is updated weekly on Saturdays.

Go to Thoora theriyum megam story main page

3 comments

  • அதே மாப்பிள்ளையை காதலிக்க ஆரம்பித்து விட்டால் மட்டும் கதைய கொண்டு போயிடாதீங்க

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.