தொடர்கதை - நல்ல முடிவு - 15 - ரவை
அடுத்த சில நிமிடங்களிலே, வாடகைக்காரன்களின் சார்பாக, வக்கீலின் கடிதம் நிரஞ்சனுக்கு கிடைத்தது.
அந்தக் கடிதம், எல்லா ஓனர்களிடமும் நேரில் சில விஷயங்கள் அவசரமாகப் பேசவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, மீட்டிங் கூட்ட வேண்டுகோள் விடுத்திருந்தது
நிரஞ்சன் உடனே எல்லா ஓனர்களுக்கும் செய்தியனுப்பி அவர்கள் அபிப்பிராயத்தைக் கேட்டான்.
பெரும்பாலானோர், வெளியூரில் வசித்ததால், ஒரு வார அவகாசம் கேட்டனர்.
நிரஞ்சனும் அதன்படியே தேதி குறிப்பிட்டு மீட்டிங் நோடீஸ் அனுப்பினான்.
" ஏங்க! இந்த வாடகை குடித்தனக்காரன்கள் பெரிய பிரச்னை பண்ணுவாங்கன்னு தோணுதே!"
" கலா! ஓனரைப்போல டென ன்டும் மனிதர்கள்தானே ஆசாபாசம் எல்லார்க்கும் உண்டே! ஓனர்களுக்கு கிடைக்கப் போகிற லட்சக் கணக்கான பணத்திலே, ஒரு சிறு பகுதி தங்களுக்கும் கேட்கிறாங்க, அவங்க உதவி இல்லாம, ஓனர்களுக்கு பணம் கிடைக்காதே, மனை பிளாட் எதுவும் விற்கமுடியாம கோடி ரூபாய் எல்லார்க்கும் கிடைக்காதே!"
" அதுக்காக பத்துலட்ச ரூபாய் ரொம்ப அதிகமில்லே? ஒரு லட்சம், நியாயம்! பத்து லட்சம் டூ மச்! ப்ளாக்மெயில் பண்றாங்க!"
" ஓனர்களும், என்னை யும் சேர்த்து, செட்டியாரின் அவசரத்தையும் அவசியத் தேவையையும் வைத்துத் தானே, ஒரு கோடி ரூபாய் விலை, பல லட்சங்கள் ஊக்கத்தொகை, எல்லாம் கேட்கிறோம், அதுவும் பிளாக்மெயில்தானே! வேற பையர், வாங்கறவன், பிளாட் ஒன்றுக்கு ஐம்பதாயிரமே தரமாட்டானே!"
"என்னவோ போங்க! மொத்தத்திலே, எனக்கு என்ன தோணுதுன்னா, மேல இருக்கிற கடவுள், ஒருவரிடம் குவிந்து கிடக்கிற பணத்தை சமயோசிதமாக மற்றவர்கள் பயன்பட, பகிர்ந்து தராருனு நினைக்கிறேன்....."
" இருக்கலாம். நியாய அநியாயமே பர்சப்ஷன்தானே, ஒருவர் பார்வையை பொறுத்ததுதானே!"
" அப்பா! ஓனர்கள் ஒத்துக்கலைன்னா, நமக்கும் கோடி ரூபாய் நஷ்டம்தானே! செட்டியாருக்கும் ஏமாற்றம்! நமக்கு அவர் உறவும் தொடர வாய்ப்பில்லே......"
" சேகர்! உண்மையில் நமக்கு நஷ்டம்னா, அதுதான், கோடி ரூபாய் இல்லே!"
" அது உண்மைங்க!" ஓனர்களில் பலர் பிளாட் பத்திர நகல், அடமான ரசீது எடுத்துக்கொண்டு வக்கீலிடம் சென்றனர்.
அவர் பார்த்துவிட்டு, ஓ.கே. சொல்லிவிட்டு, மீதி ஓனர்களும் வந்தபிறகு, மொத்தமாக இருபது பேரும் சேர்ந்து கையெழுத்திட்டு அக்ரிமெண்ட் தயாரானதும், அட்வான்ஸ் விஷயமாக,