"டாடி…" சைத்ரன் தீனமாக கெஞ்சினான்..
"இருடா… ஏதாவது செய்யலாமானு பார்க்கறேன். பூரணி பிடிவாதம் பிடித்தால் விட மாட்டாளே… எனககு கொஞ்சம் டைம் கொடு முயற்சிக்கறேன்" என்று ராம்குமார் மனைவியை தேடி சென்றார்.
"வேறு ஏதாவது செய்யலாமானு பார்க்கலாம். நீ முதல்ல ஹைடியை சரி செய். ஒருதலை காதல் உதவாது தம்பி" என்று மித்ரன் சைத்ரனுக்கு ஆறுதல் சொல்லி அழைத்து சென்றான்.
அறைக்குள் நுழையவுமே சைத்ரனின் .அலைபேசியை எடுதது நீட்டிய மித்ரனை பார்த்தான்..
"ஹைந்தவியிடம் பேசுடா…" மித்ரன் தலையசைத்தான்.
"பேச மாட்டேன்னு சபதம் போட்டேன். இப்பவே பேச வைக்கறாங்க…" அலைபேசியை எடுத்து ஹைந்தவியிடம் பேச ஆரம்பித்தான்.
"ஹாய்.." அவன் தொடரும் முன்…
"நானே பேசணும்னு நினைச்சேன். நீயே கால் பண்ணிட்ட… சரி… ஏஎஸ்பி சார் பக்கத்துல இருக்காரா?" ஹைந்தவி கேட்டாள். அனிச்சையாக சைத்ரன் அருகில் இருந்த மித்ரனை பார்க்க… அவன் மறுப்பாக தலையசைத்தான்.
"இ...ல்லை… என்ன விஷயம்?"
"என்ன விஷயம்னு நான்தான்டா கேட்கணும். அண்ணனும் தம்பியும் சரியான லூசாடா… காலைலதான் மயூரிகூட நீ பேசக்கூடாதுனு எனக்கு ஆர்டர் போட்டார். சாய்ங்காலம் அம்மாவை அனுப்பி மயூரி கல்யாணம் செய்துக்கறேன்னு பொண்ணு கேட்கறார். என்ன டிசைன்னே புரியலையே…"
"அது வந்து… உனக்கெப்படி தெரியும்"
"இதென்ன கேள்வி… மயூரி எங்கிட்ட சொல்லி இருப்பானு யோசிக்க மாட்டியா…"
"ஆங்.. என்ன சொன்னாங்கனுதான் கேட்கறேன்."
"நீதான்மா என் வீட்டு மருமகள்னு கட்டிபிடிச்சு முத்தம் தந்து… கழுத்துல ஒரு தங்க செயினையும் போட்டு விட்டாங்களாம்."
செயின்லாம் போட்டாங்களா?.மொத்தமும் முடிஞ்சு போச்சா…!