“இல்லைப்பா லாக்டவுன் முடியறவரை வர வேண்டாம்ன்னு மாமி சொல்லிட்டாப்பா... போன மாசமும் பாதி நாள்தான் வந்ததால அரை சம்பளம்தான் கொடுத்தா...”
“ஹ்ம்ம் நேக்கும் கோவிலை மூடி வச்சிருக்கா... இந்த மாசம் எப்படி சமாளிக்க போறோம்ன்னு தெரியலை... பகவான் எப்போ கண்ணைத் திறக்க போறாரோ...”
“சரிப்பா நான் சமைக்க ஆரம்பிக்கறேன்...”, லக்ஷ்மி சமயலறைக்கு செல்ல ரங்கன் மறுபடி பேப்பருடன் ஐக்கியம் ஆனார்...
“நீரஜா என்ன இத்தனை சீக்கிரம் கிளம்பற...”
“ஹாஸ்பிட்டல்ல இருந்து எமர்ஜென்சி அப்படின்னு இப்போதான் போன் வந்துது அத்தை... நான் உடனே போகணும்...”
“என்னம்மா இது... நேத்து ராத்திரியும் வர ஒரு மணி ஆகிடுச்சு... இதோ இப்போவும் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பற... நேரம் காலம் இல்லையா...”
“மத்த வேலைக்குதான் நேரம் காலமெல்லாம் அத்தை... டாக்டர் தொழில்ல அதையெல்லாம் பார்க்க முடியாது...”
“அது சரி... ராகுலுக்கு நேத்தே ரொம்ப இருமலா இருந்துச்சு... நீ வந்த உடனே சொல்லணும்ன்னு நினைச்சேன்... நீ அவனை பார்த்தியா....”
“ஓ நான் வரும்போது தூங்கிட்டு இருந்தான் அத்தை... அதனால எனக்கு தெரியலை...”, என்று கூறிய நீரஜா மடமடவென்று உள்சென்று தன் மகனை செக் செய்துவிட்டு தன் மாமியாரிடம் வந்தாள்....
“அத்தை லேசா சளி இருக்குது... இந்த மருந்தை காலைலயும், மதியமும் சாப்பாட்டுக்கு பிறகு கொடுங்க... நான் மதியம் ஒரு முறை வர பார்க்கிறேன்...”
“சரி... ராமு எப்போ வரான்... எதாச்சும் தெரிஞ்சுதா...”
“தெரியலை அத்தை... இந்த வாரம் சொல்றேன்னு சொன்னாரு....”
“சரி அத்தை... நான் கிளம்பறேன்... கமலா எல்லா வேலையும் பார்த்துப்பா... நீங்க எதுவும் செய்ய வேண்டாம்...”, என்று தன் மாமியாரிடம் கூறிவிட்டு கிளம்பினார்...
“சாந்தி கதவை பூட்டிட்டு கவனமா இரும்மா... எனக்கு உன்னை விட்டுட்டு போகவே மனசில்லை...”
“அம்மா கவலைப்படாம போயிட்டு வாம்மா.... ஆயாவ பார்க்க ஆளில்லைன்னுதானே உன்னைய மாமா கூப்பிடறாங்க... அதான் சமையல் எல்லாம் முடிச்சிட்டியே... மெதுவா குளிச்சுட்டு நான் சாப்பிடறேன்... உனக்கு சாப்பாடு கட்டிக்கிட்டியா...”
“நான் எடுத்துட்டேண்டி... இப்போ வண்டி பிடிச்சாதான் ஆஸ்பத்திரி போவ முடியும்... நான்