யோசித்துக் கொண்டே காரை டிரைவ் செய்பவன் இன்று இவ்வளவு சீக்கிரம் வீடு வந்துவிட்டதா என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான்.
வண்டியிலிருந்து இறங்கியவனின் கண்கள் தானாக ஜனனியின் மீது பதிந்தது. அவள் இன்னும் இறங்கவில்லை என்பதை உணர்ந்தவன் மறுபக்க கார் கதவை திறந்து விட்டு என்ன மேடம்... தங்களுக்கு கதவை திறந்து விடுவதற்கு நான் ஒன்னும் உங்க டிரைவர் இல்லை... எஜமானன். வீடு வந்துட்டு சீக்கிரம் இறங்கு என்றான் அதிகாரத்தோடு.
அவர்களை தொடர்ந்து ஸ்வீனாவும் அவர்கள் பெற்றோரும் வந்து விட ஜனா தன் விறைப்பான முகத்தை சிறிது சிரிப்பாக மாற்றி கொண்டான். அவன் நடிப்பது நன்றாக தெரிய ஜனனிக்கு அவளை அறியாமல் சிரிப்பு வந்தது.
அதற்குள் அவள் பின்னால் நின்ற சந்தியா ஜனனி.. உன் ஆளுக்கு நடிக்க தெரியவில்லையே என்று சத்தமாக சொல்ல ஜனா அவளை பார்த்து முறைத்தான்.
ஒரு வழியாக வந்து இருந்த நெருங்கிய உறவினர்களுக்கும் சந்தியாவிற்கும் படுக்க வசதியாக அறைகளை ஏற்படுத்தி கொடுத்தவள் ஜனனியை தேடி சென்றாள். ஜனனியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு கதை கேட்டு கொண்டிருந்த தனுவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து ஸ்வீனாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
உள்ளே வரலாமா என்றவாறே ஸ்வீனா உள்ளே வர அத்தை என்றுஅவளை கட்டிக் கொண்டவள் மகிழ்ச்சியுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தேங்க்ஸ் அத்தை என்றாள் ஜனனிக்கு கேட்காதவாறு...
தேங்க்ஸா என்று யோசிக்க நீங்க மாமா கிட்ட சொன்னதை நான் கேட்டேன். அதான் அம்மாகிட்ட எனக்கு அம்மாவா வந்து விடுங்கள் என்று கேட்டேன் என்று சொல்லி அவளை பார்த்து கண் சிமிட்ட ஸ்வீனாவோ ப்ரீஸ் ஆகி நின்று விட்டாள்.
ரெண்டு பேரும் என்ன சீக்ரெட் பேசுறீங்க என்ற ஜனனியின் சத்தத்தில் விழித்துக்கொண்ட ஸ்வீனா அண்ணாவை தேடி வந்தேன். அவர் இங்கு இல்லையா.. மாடியில் இருப்பார் நான் சென்று பார்த்துக் கொள்கிறேன் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.
ஜனாவை தேடி செல்லும் வழியில் தனு நான் அஸ்விட்ட பேசியது எதை கேட்டாள் என்று யோசிக்க அவளுக்கு நினைவு வந்தது.
அஸ்... ஜானுவை தனா அண்ணாக்கு திருமணம் செய்து வைத்தால் தனுவுக்கும் நல்ல அம்மா கிடைத்து விடும்... அண்ணா வாழ்க்கையும் நன்றாக இருக்கும். ஆனால் இவர்கள் இருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்களே என்று பேசிக் கொண்டு இருக்கும் போது தனு வந்து விட்டாள். அதனால் பேச்சை அதோடு நிறுத்தியது நினைவு வந்தது. அப்படி என்றால் அதை கேட்டு