விட்டு தான் ஜானுக்கிட்ட என்னோட அம்மாவா என் கூட வந்து விடுங்கள் என்று கேட்டு இருக்கிறாள். அம்மாடியோ.. என்ன ஒரு புத்திசாலிதனம்... எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே மாடிப்படி ஏறினாள்.
அங்கு வெட்ட வெளியில் நின்று நிலாவோடு ரகசியம் பேசிக் கொண்டு இருந்தான் ஜனா..
தனா அண்ணா... ட்ரீம்ல இருக்கீங்க போல என்ற ஸ்வீனாவை பார்த்ததும் இல்லடா... அம்மாவை பார்க்கனும் போல இருந்தது என்றான் ஜனா...
அண்ணா... எப்போதும் உங்க கூடவே இருக்கிறவங்களை ரொம்ப தூரத்தில் தேடுகிறீர்கள்... வாங்க போகலாம் என்று அவன் கையைப் பற்றி இழுத்து வந்தாள்.
அண்ணா... இனி ஜனனி உங்க ரூம்ல தான் இருப்பா... ஞாபகம் இருக்கட்டும் என்று ஒற்றை விரல் நீட்டி பேசியவளைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
சிறுவயதில் இருந்தே ஜனாவை எதிர்த்து யாரும் பேசியதில்லை. அதுவும் வளர்ந்து பருவ வயதை எட்டியதும் மற்றவர்களை போல ஜாலியாக பொழுதை கழிக்காமல் பிஸினஸ் படிப்பு வீடு என்று இருந்தவனை யாரும் கண்டிக்க வேண்டிய அவசியமோ அறிவுரை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமோ ஏற்படவில்லை.. பொறுப்பாக பண்பாக இருந்தவனிடம் தந்தை கூட சத்தம் உயர்த்தி பேசியதில்லை.
ஒரு பார்வையில் அனைவரையும் அமைதியாக்கிவிடும் ஜனா இளவரசன் போல அதிகாரம் நிறைந்தவனாய் சுற்றி வந்தான். அப்படிப்பட்டவனை அடங்கி போக வைத்தது ஸ்வீனா மட்டும். ஏனோ பார்த்ததுமோ அவளை பிடித்து விட்டது ஜனாவுக்கு.
அவளைப் பார்த்த அன்றிலிருந்து இன்று வரை தன் முடிவை மாற்றிக் கொண்டது அவளுக்காக மட்டும் தான்... இன்றும் முடியாது என்று சொன்னால் விட போவதில்லை... அதனால் அவள் விருப்பப்படி நடக்கட்டும் என்று நினைத்து விட்டு தன் லேப்டாப்பை திறந்து வைத்து கொண்டு அமர்ந்தான்.
ஆனால் அவன் மனம் வேலையில் லயிக்கவில்லை.. முதல் நாள் பார்த்த ஞாபகம் வந்தது. அதோடு ஸ்வீனா நிச்சயம் அன்று பார்த்த ஃபேரி கேர்ள் நினைவும் வந்தது. ஒவ்வொரு ஆடையிலும் வேறு வேறு விதமாக இருந்தாலும் அவள் அழகு தான் என்று நினைக்க அவன் மனமோ அழகு இல்லை பேரழகு என்றது..
அவன் உதடுகளோ மறுநொடியே பேரழகி தான் என்றது. திருமண புடைவையில் சிறிது ஒப்பனையுடன் அப்பழுக்கற்று தெரிந்த அந்த பேரழகு முகம் அவன் கண் முன்னே வர அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது... உதட்டில் ஒரு மென்னகை தொற்றி கொள்ள அவனுக்கு நேராக வைக்கப்பட்டிருந்த டேபிள் ஃபேனின் காற்றின் சக்தியால் அவன் கேசங்கள் கலைந்து ஆட அவன் ஆனழகனாக தெரிந்தான் அவளுக்கு.