கட்டுரைய பஸ் ஸ்டாப்ல நான் கொடுத்தா நீ செக் பண்ணி முடிக்க டைம் இருக்குமா? என்றவளிடம், உனக்கு கண்டிப்பா சாயங்காலம் முடிச்சுத் தரேன் சத்யா!” என்ற ரம்யா மெல்லிய குரலில் “சத்யா நீ போனை வச்சிரு! உன்கிட்ட பேசிட்டு இருக்கிறமாதிரியே அப்படியே கால் பண்ணி, நான் தினேஷிடம் பேசிக்கிறேன்!” என்று கண்மணி கையாளும் முறையில், சத்தமின்றி, “மன்ற விழா முடிஞ்சு ஏழு மணிக்கு வீட்டுக்குப் பத்திரமா வந்துட்டேன். நாளைக்குப் பார்போம்!” என்று எதிர்முனையின் பதிலுக்குக் காத்திராமல் “குட்நைட் சத்யா!” என்று சத்தமாக சொல்லி போனை வைத்தாள்.
“என்னவாம்? சத்யா இந்நேரம் போன் போட்ருக்கா?” அம்மா கேட்க , அவளுக்கு ஒரு கட்டுரைல கிராமர் செக் பண்ணனுமாம். அதுக்குத் தான் ஹெல்ப் கேட்டா! ரம்யா அதைச் சொன்ன மறுகணம், “என்னிக்காவது பொறுமையா உக்கார்ந்து உன் தம்பி ரகுவுக்கு கிராமர் சொல்லிக் கொடுத்திருக்கியா. நாளைக்கு அவ கேட்ட கட்டுரைய சரிபார்த்துட்டு வேகமா ஓடுவ. சத்யா சத்யா சத்யா எந்நேரமும் அவ கேட்டா மட்டும் என்ன வேணா செய்வ. கூடப்பிறந்தவனை விட உனக்கு உன் ப்ரெண்ட் தான் பெருசு!” அம்மா அழும் குரலில் குறைப்பட்டுக் கொள்ள, நான் எங்கம்மா அவனுக்கு கிராமர் சொல்லித்தரமாட்டேன்னு இருக்கேன். சேர்ந்தாப்ல உக்கார்ந்து அவன்தான் கேக்க மாட்டான். நான் சொல்லிக் கொடுத்தாலும் நக்கலா பதில் பேசி என்னை இரிடேட் பண்ணுவான்!” ரம்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, டியூசனில் இருந்து வந்த ரகு, “என்ன என் பேரு அடிபடுது!” என்றான் “ஆமா அடிபடுது!போடா. உனக்கு கிராமர் சொல்லிக் கொடுக்குற நேரத்துக்கு எருமை மாட்டைக் கூட ஏரில் பூட்டி எட்டு ஏக்கர் நிலத்தை உழுதுருவேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டிருந்தேன்!” என்றாள். ரகு அவளை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வர, அம்மாவின் பின்னால் போய் நின்று கொண்டாள். அங்கே தினேஷ் வீட்டில், தினேஷின் அம்மா, போன் அருகில் சிந்தனையுடன் நின்றுகொண்டிருந்தார்.
தொடர்வேன்
Next episode will be published on 24th Jan. This series is updated weekly on Sunday mornings.