தொடர்கதை - லாக் டவுன் – 04 - ஜெய்
ஹாய் friends, எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்... very sorry மார்கழி மாச பண்டிகைகள், பொங்கல் பண்டிகை அப்படின்னு போன வாரம் பயங்கர busy... அப்டேட் போட முடியலை... அப்பறம் இன்னைக்கு அப்டேட்ல ரங்கனுக்கு நடந்தது நிஜத்தில் என் தோழியின் அன்னைக்கு நடந்தது... கிட்டதட்ட நான்கைந்து மணி நேரம் அலைந்து கொரோனா ரிப்போர்ட் இல்லாததால் அனுமதிக்க முடியாமல் உயிரிழந்து விட்டார்.... முதலில் சென்ற மருத்துவ மனையில் அவரை அனுமதித்து இருந்தால் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்து இருக்கும்... இதைப் போல எத்தனையோ கதைகள்.... என்று விடியுமோ...
ராபர்ட்டுடன் இன்னும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து ரங்கனைத் தூக்க செல்ல, அவர் தலை தொங்கிப் போய் கிடந்தது...
“ஐயோ ராபர்ட் சார்... அப்பாக்கு என்னாச்சுன்னு தெரியலையே...”, ரூமின் உள்ளிருந்து வந்த லக்ஷ்மி அழ ஆரம்பித்தாள்...
“ஒண்ணும் இருக்காதும்மா... மயக்கம்தான் இருக்கும்.... இப்போ இவரை வண்டில கூட்டிட்டு போகலாமா தெரியலையே.... ஆம்புலன்ஸ்ன்னா டாக்டர் இருப்பாங்க... மணி எதுக்கும் நீங்க ரெண்டு தெரு தள்ளி ஒரு டாக்டர் இருக்காரில்லை... அவரை கூட்டிட்டு வாங்களேன்.... அவர் வந்து பார்த்துட்டு சொல்லட்டும்... அதுக்கு பிறகு முடிவெடுக்கலாம்.... எதுனால மயக்கம்ன்னு தெரியலையே...”, ராபர்ட் கூற மணி அந்த கிளினிக் நோக்கி விரைந்தான்...
மருத்துவமனையை அடைந்து விஷயத்தை சொல்ல, அங்கிருந்த மருத்துவர் ஏற்கனவே பல நோயாளிகள் காத்திருப்பதால் தன்னால் தற்பொழுது வர முடியாது, இங்கு அழைத்து வந்தாலும் போதிய வசதிகள் இல்லாததால் அவசர சிகிச்சை அளிப்பது கடினம் எனவே பெரிய மருத்துவமனைக்கே அழைத்து செல்ல சொல்ல, மணியும் ராபர்ட்டை கைப்பேசியில் அழைத்து அதை சொன்னான்....
“ராபர்ட் இனியும் வேற ஆப்ஷன் பார்க்க வேண்டாம்... ரங்கன் சாரை எல்லாருமா சேர்ந்து அலுங்காம கார்ல ஏத்திடலாம்... லக்ஷ்மி நீ பின்னாடி உக்காருமா... உங்க அப்பா தலையை உன் மடில இருக்கறா மாதிரி வைக்கறோம்... அசையாம பிடிச்சுக்கோ... ராபர்ட் நீ வண்டி எடு.... நானும், என் மனைவியும் வரோம்...”, எதிர் வீட்டில் வசிக்கும் சோமநாதன் சொல்ல, அவரும் இன்னும் தெருவில் வசிக்கும் சிலருமாக ரங்கனை அலுங்காமல் காரில் ஏற்றினார்கள்....
ராபர்ட் காரை கிளப்ப அவர்கள் வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்தில் வரும் மருத்துவமனைக்கு ரங்கனை அழைத்து சென்றார்கள்... அந்த மருத்துவமனை வாசலில் நிற்கவே காசு வாங்குவார்கள்... லக்ஷ்மிக்கு ஐயோ பணத்திற்கு என்ன பண்ணுவது என்று மனது பதைபதைத்தது...
அங்கு சென்றதும், ராபர்ட் இறங்கி அவசர சிகிச்சை பிரிவை அணுக, அவர்கள் கொரோனா டெஸ்ட் ரிப்போர்ட் இல்லாமல் நோயாளியை அனுமதிக்க முடியாது என்று கூற, உடனடியாக அவருக்கு டெஸ்ட் எடுக்க ராபர்ட் கேட்க, அங்கு டெஸ்ட் செய்யும் வசதியில்லாததால் டெஸ்ட் எடுப்பதற்கு அங்கிருந்து அடுத்த அரை மணியில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல அவர்கள் கூற, அவர்களை திட்டியபடியே ராபர்ட் காரை எடுத்தான்....
“என்னா சார் இது... பேஷன்ட் நிலைமை மோசமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன்...