தொடர்கதை - என் உயிரானவள்... – 11 - பத்மினி செல்வராஜ்
“தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்...தட்ஸ் ஆல்... கதை முடிந்து போச்சு...என்ன பிரின்சஸ்...இந்த கதை உனக்கு பிடித்ததா?” என்று ஆர்வமாக கேட்டான் துஷ்யந்த்.
அவன் அறையை ஒட்டியிருந்த அந்தபுரத்தில், மணிகர்ணிகாவின் அறையில் அவள் படுக்கையில் தலையணையை முதுகுக்கு கொடுத்தவாறு சாய்ந்து அமர்ந்து கொண்டு, இன்னும் இந்த பூமியில் காலடி பதித்திராத, முகம் தெரியாத தன் மகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.
அதே படுக்கையில் அவன் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டு படுத்திருந்தாள் மணிகர்ணிகா. ஏழாவது மாதம் ஆரம்பித்திருக்க அவள் அணிந்திருந்த நைட்டியையும் மீறி கொஞ்சமாய் மேடிட்டிருந்த அவளின் வயிறு அவளுடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ியவள், அவன் கட்டளைக்கு, கெஞ்சலுக்கு ஏன் கொஞ்சலுக்கு கூட கொஞ்சமும் இறங்காமல் அவனை துச்சமாக மதித்து எதிர்த்து நின்றவள்
அப்படிப்பட்ட சண்டிராணி அருகில் அதுவும் இப்படி உல்லாசமாக படுத்திருக்க