தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 03 - முகில் தினகரன்
இரவு பனிரெண்டே முக்கால்
ஏ.சி.தீனதயாளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி சுந்தரம்.
வானம் லேசாய் மப்பும் மந்தாரமுமாய் இருக்க, காற்று குளிராய் வீசியது.
அவ்வப்போது கடந்து செல்லும் ஆட்டோக்களில் மல்லிகைப் பூ மகாராணிகள் மகசூலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
முந்தைய இரவின் சம்பவமும் இன்று அந்த “விஸ்வா டவர்ஸ்”காம்ப்ளக்ஸ் வாட்ச்மேனின்றி வெறிச்சோடியிருப்பதும் பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி சுந்தரத்திற்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியது.
சில நேரங்களில் “பேசாமல் இன்னிக்கு லீவு போட்டிருக்கலாம்!” என்று கூடத் தோன்றியது. ஆனாலும் ஏ.சி.தீனதயாள் வருவதாகச் சொல்லியிருந்ததால் அந்தக் கலக்கம் அவனை அதிகமாய்ப் பாதிக்கவில்லை.
வாட்ச்மேன் கூண்டிற்குள்ளிருந்த அந்த சிறிய கடிகாரத்தில் மணி பார்த்தான்
ஒரு மணி ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த்து.
“என்னது...ஏ.சி.சாரைக் காணோம்?...ஒருவேளை வர மாட்டாரோ?” யோசனையுடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்த சுந்தரத்தின் மீது ஒரு கை விழ்
வெலவெலத்துப் போய்த் திரும்பினான்.
“ஹி...ஹி...ஹி”என்று தன் காவிப் பற்களைக் காட்டிக் கொண்டு அசிங்கமாய்ச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான் ஒரு கோடாங்கி.
சட்டென்று சுதாரித்துக் கொண்ட செக்யூரிட்டி சுந்தரம்
“த்தூ...நாயே!...உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?...திடீர்ன்னு வந்து பின்னாடி தொடுறே!...மூஞ்சிக்குப் பக்கத்துல வந்து பல்லைக் காட்டிச் சிரிக்கறே!...யாருய்யா நீ?...என்ன வேணும் உனக்கு?” கத்தினான்.
“என்ன சுந்தரம்...பயந்துட்டியா?”
“இந்தக் குரல்...இந்தக் குரல்...அய்யோ...எங்கியோ கேட்ட மாதிரியே இருக்குதே...”
நெற்றியைத் தடவிக் கொண்டு யோசித்த செக்யூரிட்டி சுந்தரம திடீரென்று அடையாளம் கண்டு கொண்டவனாய “சா....ர்....ர்ர்ர்ர்” என்று இழுத்தான்.
கோடாங்கி கெட்டப்பில் இருந்த ஏ.சி.தீனதயாள் “சரி...சரி...தெரிஞ்சிடுச்சல்ல...காட்டிக்காதே!...வா...அந்தக் காம்ப்ளக்ஸ் பில்டிங்கிற்குள்ளார போய்ப் பார்ப்போம்!” என்று சொல்லி விட்டு பம்மிப் பம்மி அந்தக் காம்ப்ளக்ஸ் பில்டிங்