தொடர்கதை - கனவே கலையாதே.... - 06 - தனுசஜ்ஜீ
மணி 4.30 தான் ஆகியிருந்தது. அதனால் கதிர் காலை வேளைகளை வீட்டினர் எழு முன் முடித்துவிடலாம் என்று எண்ணி தர்ஷினியிடம் கூற, அவளும் புது இடம் எது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால் ஒப்புக்கொண்டாள்.
அதன்படி அவளை அழைத்து சென்றவன் பாத்ரூமில் குளிக்க சொல்லி விட்டு வெளியிலே நின்றான். இதுபோன்று அவள் காலைவேளை அனைத்தையும் முடிக்கும் வரை இவன் துணையாக நின்றான்.
அனைத்தும் முடிந்தபின் அவளை அறையில் விட்டவன்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன் என்று கூற, ஒரு சிரிப்புடன் தலையாட்டினாள்.
பத்து நிமிடத்தில் வெள்ளை பனியன் அணிந்து கைலியுடன் துண்டினால் தலையை துடைத்துக் கொண்டே அவன் அறையில் நுழைய,
அவள் அப்பொழுது தான் புடவையை கட்டி கொசுவத்தை இடுப்பில் சொருகினாள். கதவைத் திறந்தவன் எதிர்பாராதவிதமாக அவளது இடுப்பை கண்டுவிட்டான்.
அவளும் அதனை பார்த்து விட்டாள். இருவருக்கும் அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெரியாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் திரும்பி கொண்டனர்.
தர்ஷினிக்கு கன்னங்கள் இரண்டும் சூடாகி விட்டன. உதட்டில் முதன்முறையாக வெட்க சிரிப்பு. வேகவேகமாக புடவையை கட்டி முடித்தாள். எப்பொழுதும் அவள் கண்ணாடி பார்த்து தான் புடவை அணிவாள். கதிர் வீட்டில் கண்ணாடி இல்லாததால் புடவை அணிய அவளுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது அதனால் தான் இவ்வளவு நேரம். கண்ணை இருக்கமாக மூடி, கன்னத்தை தன் கைகளால் தேய்த்து என்று தன்னை ஆசுவாச படுத்தியவள். திரும்பி அவனை பார்க்க, திரும்பிய பொழுது எப்படி இருந்தானோ அதே போல் தான் இருந்தான். அவனை பார்த்தவள் அமைதியாக வாய் விட்டு சிரித்தாள்.
சிரித்து முடித்தவள் கதிர் என்று அழைக்க...
அவனிடம் பதில் இல்லை.
மறுபடியும் அவள் சற்று உரக்க அழைக்க....
சொல்லுங்க என்று திரும்பாமலே பதில் கூறினான்.
அதனைக் கண்டவள் அவளிடம் சற்று விளையாடி பார்க்க எண்ணி,
கதிர் இந்த சேஃப்டி பின்ன இங்க குத்தி விடுறிங்களா....
என்ன...... என்று அவன் அதிர்ச்சியாக கேட்க .....அப்பொழுதும் திரும்பினானானில்லை.