“நீதான் பெரிய ஜீனியஸ் ஆச்சே?...இந்தக் கோயிலுக்கு நிறைய கூட்டம் வரணும்!...வருமானம் அதிகமாகணும்!...பாழடைஞ்சு கிடக்கற கோயில் கட்டிடத்தைப் புதுப்பிக்கணும்!...அதுக்கு ஏதாவதொரு ஐடியா குடு” அன்று சுதாகர்ஜி சிரித்துக் கொண்டே சொன்னது காதுகளுக்குள் ஒலித்தது. “கடவுளே?...உனக்கும் மார்க்கெட்டிங் தேவையா?” தலையைப் பிய்த்துக் கொண்டான்.
“சலங்கையிட்டாள் ஒரு மாது...சங்கீதம் நீ பாடு”. மொபைல் இசைத்தது.
எடுத்துப் பார்த்தான். கோகிலா.
“சொல்லுங்க கவிதாயினி” குரலில் செயற்கை சந்தோஷத்தைக் கொண்டு வந்து பேசினான்.
“ம்ம்...நேத்திக்கு ராத்திரி...மூணு...மூணரை மணியிருக்கும்...தூக்கத்திலேயே ஒரு கவிதை மனசுக்குள்ளார ஓடிச்சு!...சட்டுன்னு கண் முழிச்சு...உடனே ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அதை எழுதிட்டேன்!...படிச்சுக் காட்டட்டுமா?” கோகிலா கொஞ்சலாய்க் கேட்டாள்.
“ஏங்க...நீங்க என்ன பேயா?...இல்லை பிசாசா?..இப்படி நடு ராத்திரில எந்திரிச்சு கவிதையெல்லாம் எழுதறீங்களே?...”
“எல்லாம் எத்தனை நாளைக்கு...கல்யாணம் ஆகிற வரைக்கும் தான் அதுக்கப்புறம் கவிதையாவது...கத்தரிக்காயாவது?...கணவருடன் கவியம் படைப்பதற்கே நேரம் போதாதே?” சலித்துக் கொண்டே சொன்னாள் கோகிலா.
“ஏன் அப்படிச் சொல்றீங்க?...ஒருவேளை உங்களுக்கு வரப் போகிறவரும் உங்களை மாதிரியே கவிதைல ஆர்வமுள்ளவராய்க் கூட இருக்கலாமல்லவா?” ரவீந்தர் சொல்ல, எதிர்முனையில் யாரோ ஒரு கூடை ரோஜாப்பூவை கோகிலாவின் மீது கொட்டினார்கள்.
“என்ன சொல்லறீங்க?...எனக்கு வரப் போகிறவர்...கவிதை ஆர்வமுள்ளவராய் இருப்பாரா?...” வேண்டுமென்றே அவன் வாயைக் கிளறினாள் கோகிலா.
“யாருக்குத் தெரியும்?...கவிதை எழுதுபவராய்க் கூட இருக்கலாம்!...உங்களுடைய ரசிகராய்க் கூட இருக்கலாம்!”
அவன் தன்னைத்தான் மறைமுகமாய்க் குறிப்பிடுகிறான், என்று புளகாங்கிதம் கொண்ட கோகிலா, பேச்சே வராமல் அமைதியானாள்.
“என்னங்க திடீர்னு அமைதியாயிட்டீங்க?”
“ஒண்ணுமில்லை!...யாரோ என் மேல் ஒரு கூடை ரோஜாப்பூக்களைக் கொட்டிய மாதிரி இருந்தது...அதான் அமைதியாய் அதை ரசிக்கத் துவங்கிட்டேன்” என்றாள் கோகிலா.
“சரி...அந்த மூணு மணிக் கவிதையைப் படிங்க...நான் அதை ரசிக்கறேன்” என்றான் ரவீந்தர் சிரித்துக் கொண்டே,
“உலகின் மிக நீண்ட நதி நைல் நதியாம்!