தேவநாதனுக்கு வயிறெல்லாம் கலங்கியது. “பாவி!...பழிகாரி!...இவ வாயைத் திறந்து பேசினாத்தான் வம்பு வந்திடும்னு நெனச்சேன்!...ஆனா வாயைத் திறக்காமலேயே வம்பைக் கொண்டு வந்திட்டாளே!”
உள் அறைக்குள் அர்ச்சனாவும் அதையேதான் சொல்லிக் கொண்டிருந்தாள், “காஃபி வேண்டாம்ன்னா... ஒரு புன்சிரிப்போட...நாசூக்கா... “இல்லைம்மா...வேண்டாம்...நான் காஃபி சாப்பிடறதில்லை!ன்னு நாகரீகமா சொல்ல வேண்டியதுதானே?...அதை விட்டுட்டு அப்படியென்ன ஒரு வெறுப்பு?...அப்படியொரு பழிப்பு!...இது வரைக்கும் எங்கேயும் நடக்காத அதிசயமா...உலக வரலாற்றிலேயே முதல் தடவையா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணுப் பார்க்க வந்த இடத்திலேயே “சம்மதம்”னு முடிவைச் சொல்லியிருக்காங்க!....இந்தச் சூழ்நிலைல அந்தச் சம்பூர்ணத்தாலே இதுல ஏதாவது வில்லங்கம் வந்துடும் போலிருக்கே!...அப்படி மட்டும் ஏதாச்சும் வரட்டும் அப்புறம் வெச்சுக்கறேன் அந்தக் கிழட்டுச் சனியனை!” “பட..பட”வெனப் பொரிந்து தள்ளினாள் அவள்.
திடீரென்று கூடத்தில் எல்லோரும் கோரஸாய்ச் சிரிக்கும் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்க,
“ஏய்...அர்ச்சனா...போய் என்ன?ன்னு பாருடி!” சுலோச்சனா தங்கையை விரட்டினாள்.
எழுந்து அந்தச் சிறிய ஜன்னல் நோக்கி ஓடினாள் அர்ச்சனா.
தொடரும்...
Next episode will be published on 20th Feb. This series is updated weekly on Saturdays.