வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் மறைத்து கொண்டு சிரிப்புடன் சில இனிப்புகளையும் ஸ்வேதாவிடம் கொடுத்தாள்.
கிரேட் ஜனனி என்று அவளிடம் கை குலுக்கி விடை பெற அவளை வழியனுப்ப ஜனா ஜனனி இருவரும் தொடர்ந்து வெளியே வந்தனர்.
காரில் ஏறி அமர்ந்த ஸ்வேதா அருகில் வருமாறு சைகை செய்ய அருகில் சென்ற ஜனா அவளது பக்கத்தில் சென்று குனிந்து கொண்டு என்ன என்று கேட்க, உங்களுக்கு நான் மனைவியாக வந்திருந்தால் உங்களுக்கு நல்ல மனைவி கிடைத்திருப்பாள்... ஆனால் தனுவிற்கு நல்ல அம்மா கிடைத்து இருப்பார்களா என்றால் தெரியவில்லை... ஆனால் இப்பொழுது நல்ல மனைவியும் நல்ல அம்மாவும் கிடைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் என்று அவன் காதோரமாய் சொல்ல வாசலில் உள்ளே நின்ற ஜனனிக்கு அது வேறு விதமாக தெரிந்தது.
மிக அருகில் நெருங்கி நின்று பேசும்போது அவன் முகத்தில் ஏற்பட்ட அந்த மாற்றம் ஜனனியின் கருத்தில் பதிந்தது. ஸ்வேதா பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஜனாவிற்கு கொடுத்த மகிழ்ச்சியில் அவன் முகம் பிரகாசித்தது. ஆனால் அவள் பேசியது எதுவும் கேட்காத ஜனனியோ அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் அங்கிருந்து உள்ளே நடந்தாள்.
ஜானுவிடம் தன் மனதில் இருப்பதைசொல்லிவிட வேண்டும் என்ற உறுதியுடன் ஜனா உள்ளே செல்ல ஜனனி எதையும் கண்டுகொள்ளாமல் ஜனா என்ற ஒருவன் இருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் தனக்குரியதை பேக் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்ச்சியற்ற அந்த தன்மை ஜனாவிற்கு வேறுவிதமான ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
மனம் விட்டுப் பேசினால் மனதின் பாரங்கள் குறைவதோடு வாழ்க்கையும் வசந்தமாகும் என்பது உண்மைதான்... இவர்கள் இருவரும் தங்கள் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் தங்களுக்குள்ளே மறைத்துக்கொண்டு மற்றவர்களுக்காக வாழ முயற்சிக்கிறார்கள்.... இதன் விளைவு என்னவாக இருக்கும்?...
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.