தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 01 - விஜேஜி
இந்தக் கதை என்னுடைய கற்பனைக் கதை, மற்ற கதைகளைப் போல இதுவும் ஒரு காதல் கதை. எந்த நபரையும், எந்த மதத்தையும் சுட்டிக் காட்டி, இந்தக் கதையை எழுதவில்லை. இந்தக் கதையில் உள்ள நிறை குறைகளை பதிக்க மறவாதீர்கள் ….
விஜேஜி.
அத்தியாயம் 1
இனிமையான அந்தக் குரலில் மயங்காதவர்களே கிடையாது, எல்லோரும் மயங்கினர் அவனை திரும்பிப் பார்த்த அனைவரும் அவன் அழகிலும் மயங்கினர் அந்தச் சிறுவனின் முன் ஒரு அலுமினிய தட்டு இருந்தது, அதை பார்த்த பலபேர், அவனுக்கு தாரளாமாக பணத்தைப் போட்டனர்.
அந்த சிறுவனோ ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு இடத்தில் பாடி பிச்சை எடுத்தான், மதியம் சாப்பாட்டு நேரத்தில், அந்த பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று, பள்ளிக்கூட குழந்தைகள் அழகிய யுனிபார்ம் ட்ரஸில், சக குழந்தைகளுடன், சாப்பிடுவதும், வலம் வருவதும், விளையாடுவதும் அந்தச் சிறுவனுக்கு பார்க்க சந்தோஷமாக இருந்தது அந்த சிறுவனுக்கு, தனக்கும் இப்படி படிக்க வேண்டுமென்ற ஆசை, ஆனால் முடியுமா? இவன் தினம் பாடுவதை பார்த்த , அந்த பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்து "நீ ரொம்ப நல்லா பாடுற" என்றான்
"ஓ! உனக்கு பிடிச்சுதா?"
"எனக்கு ரொம்ப பிடிச்சுது, எனக்கு சொல்லித்தரியா?"
"ஓ! நான் உனக்கு பாட்டு சொல்லித்தறேன், நீ எனக்கு படிக்க சொல்லித்தர்யா?" என்று கேட்டவனிடம்
"ம்ம், சொல்லித்தரேன், ஆனா இங்கேயில்ல, அங்கே பார்க் இருக்கில்ல அங்க போலாமா? இங்கெல்லாம் உடமாட்டாங்க,"
"சரி!"
"தினம், சாப்பாட்டு நேரத்துக்கு இந்த பார்க்குக்கு வந்துடு, இங்கேயே நாம படிக்கலாம்"
"சரி" என்றான்
"உன் பேரென்ன? என் பேரு பிரபு!"
"என் பேர் ஒன்னு, அப்படித்தான் எல்லாம் கூப்பிடுவாங்க"
ஒண்ணா? அது நம்பராச்சே, அது பேரில்லையே...."
"எங்க மாஸ்டர் அப்படித்தான் கூப்பிடுவாங்க, என் கூட இன்னும் பசங்க