தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 14 - தனுசஜ்ஜீ
என்னது மாப்பிள்ளையா....
ஆமாம் மாப்பிள்ளை தான். என்ன அனிதா அசோக் கிட்ட விஷயத்தை சொல்லலையா.....
என்ன விஷயம் கதிர்.....
உங்களுக்கும் அனிதாவும் கல்யாணமாமே அசோக்.....
வாட்.......என்று அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று அனிதாவை பார்த்தான்.
அனிதா தலையை குனிந்து கொண்டாள்.
உடனே அனிதாவின் அப்பா வெங்கடாச்சலம் அசோக் தம்பிக்கு தெரியாதுப்பா. நாங்க இனிமே தான் அவர்கிட்ட பேசலாம்னு இருந்தோம் கதிர் தம்பி.
ஓ அப்படியா நானாதான் உளறிட்டனா.... சாரி அங்கிள்.
பரவால்ல விடுங்க தம்பி. நானே எப்புடி கேக்குறதுன்னு தயங்கிட்டு இருந்தேன். நீங்க விஷயத்தை போட்டு பட்டுனு ஒடச்சிட்டங்க.....என்றவர் சிரித்த முகமாக அசோக்கை நோக்கி,
என்ன சொல்ற அசோக். உன் முடிவு என்னனு டைம் எடுத்து கூட சொல்லுப்பா. சின்ன வயசுல இருந்து கூடவே இருந்த புள்ள உன்ன பத்தி எங்களுக்கு தெரியும். அனிதாவை உன்னை நம்பி தான் நாங்க சென்னைக்கே அனுப்பி வச்சோம். அனிதா உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டப்ப ஒன்ன வேண்டாம்னு சொல்ல எங்க கிட்டயும் எந்த காரணமும் இல்ல அசோக். இப்ப உன் முடிவில தான் இருக்கு. இன்னைக்கு சாயந்திரமே உங்க வீட்டுக்கு நானும் ஆண்டியும் வரோம். கல்யாணத்தை பத்தி பேசறதுக்கு என்ன சொல்ற அசோக் தம்பி.
அனிதாவை கோபமாக பார்த்தவன் கதிரையும் பார்த்தான். கதிர் முகத்தில் எந்த சலனமும் இல்லை புன்னகையுடன் அசோக் ரியாக்க்ஷனை பார்த்துக்கொண்டிருந்தான். உடனே அசோக் வெங்கடாசலத்திடம்,
அங்கிள் உங்க பொண்ணு கிட்ட நான் பேசனும் தனியா.....
ம்ம்.... பேசலாம் தம்பி. வீட்டுக்கு போய் பேசலாமா......எல்லாத்தையும் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. இந்த ஆஸ்பிட்டல் வாடயே எனக்கு சுத்தமா பிடிக்கல. எப்படா வீட்டுக்குப் போவோம்னு இருக்கு அதான் தம்பி சொல்றேன்.
ஓகே அங்கிள் சரி வாங்க நானே உங்கள கூட்டிட்டு போறேன். ஆட்டோக்கு சொல்லிருக்கீங்களா.....
கதிர்: அட என்ன நான் இருக்கும்போது ஆட்டோக்குலாம் சொல்லிக்கிட்டு உங்க எல்லாரையும் நானே ட்ராப் பண்றேன் அங்கிள்.
இல்லப்பா உனக்கு எதுக்கு சிரமம்.
அபிராமி: அட இதுல என்ன சிரமம் இருக்கு சம்பந்தி. சாரி அண்ணா.சம்பந்தினு கூப்புட்டே