சரி தேன்மொழி என்று அவன் எழுந்து நிற்க....
சார் நீங்க எங்கயும் போக வேணா..... இங்கேயே இருங்க நான் வந்துடுவேன். அதுவுமில்லாம அனிதாக்கு இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் அவங்களும் எப்ப வேணாலும் வருவாங்க. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சார். நீங்க இங்கேயே இருக்கலாம்.
சிறிது யோசித்தவன். சரி தேன்மொழி நீங்க போயிட்டு வாங்க என்று என்று கூறி அவர்களுக்கு விடைகொடுத்தான்.
அவள் சென்றவுடன் ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தவன். பிறகு கதவை உள்பக்கமாக தாழிட்டு மெதுவாக அவளது அறையை அடைந்தான். அங்கு சென்று அவளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அங்கிருந்த கப்போர்டை ஓபன் செய்து அங்கிருந்த சர்டிபிகேட், மார்க் சீட், டைரி என்று அனைத்தையும் எடுத்து பார்த்தான். ஏனென்றால் அவள் எங்கு சென்று படித்தாள். எப்படி படித்தாள். எத்தனை மார்க் வாங்கினாள் என்று அறிந்து கொள்ளும் ஆவலே அவனிடம் அதிகமாக இருந்தது. அதற்காகவே அவள் தனியாக இருக்க சொன்னதும் சரி என்று விட்டான்.
அனைத்தையும் புரட்டி பார்த்தான். அவளது சிறுவயது புகைப்படம் டைரியில் இருந்ததை பார்த்தவன். அதனை கையில் எடுத்து அதற்கு ஒரு முத்தம் கொடுத்து தன்னுடைய பர்சில் அதை பதுக்கி வைத்துக் கொண்டான். பிறகு அவளுடைய அனைத்து விவரத்தையும் பார்த்து தெரிந்து கொண்டவன். புன்னகையுடன் அதை அதே இடத்தில் வைத்தான். கடைசியாக அவளது மார்க் சீட்டை வைக்கும்பொழுது ஒருபேப்பர் கீழே விழுந்தது. அதனையும் எடுத்து புன்னகை முகமாக பார்த்தவனது முகம் படிப்படியாக கடுமையை பூசி இறுதியில் இறுகிவிட்டது.
அதனையும் அதே இடத்தில் வைத்து விட்டு அமைதியாக சென்று அமர்ந்தவனது மனது உலைக்களமாக கொதித்துக்கொண்டிருந்தது. அதற்குமேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை. கதவை மட்டும் சாத்தி தாழ்ப்பாள் போட்டவன். விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
நேராக ஆபீஸ் சென்றவன் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு கதிரை அழைத்தான்.
கதிர் அப்பொழுதுதான் அனிதாவையும், அனிதா குடும்பத்தையும் தேன்மொழி வீட்டில் இறக்கிவிட்டு இறங்கினான். உடனே கார்த்திக் கால் வர அதனை அட்டென்ட் செய்தான்.
மச்சி எங்க இருக்க.....