(Reading time: 8 - 16 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

       அனிதாவ டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க.  இப்பதான் இறக்கிவிட்டேன். ஏன்டா நீ ஆபிஸ் போலயா.....

      அங்க இருந்துதான் பேசுறேன் மச்சான். நான் தண்ணி அடிக்க போறேன் வரியா.

       ஏனென்றால் கதிருக்கும், கார்த்திக்கிற்கும் ஒரு பழக்கம். இருவரில் யாராவது ஒருத்தர் அப்படி கூறினால், அவருக்கு கண்டிப்பாக மனது சொல்ல முடியாத வேதனையில் உள்ளது என்பது இவ்விருவருக்கு மட்டுமே புரிந்த ஒரு பாஷை. இந்த மாதிரி நிலையில் எந்த வேலை இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பது அவர்களது நட்பின் பலம். அதனால் கார்த்திக் இப்படி கேட்டதும் அபிராமிக்கு வண்டியை வர சொல்லி விட்டு கதிர் உடனே கிளம்பி விட்டான்.

       கதிரும், கார்த்திக்கும் தங்களது வீட்டின் மாடியறையில் தங்களுக்கென்று ஒரு மினி பார் வைத்திருந்தனர். எப்பொழுதும் அல்ல மனது சரியில்லாத நேரத்தில் மட்டும். அங்குதான் இருவரும் இருப்பர்.

       இப்பொழுது இருவருக்கும் இரு கிளாஸ் வைத்து ஷாம்பயினை ஊற்றிக் கொண்டிருந்தான் கதிர். கார்த்திக்கின் முகம் கலையின்றி எதையோ துளைத்தது போன்றிருந்தது. அவனுடன்  கதிரும் நாலைந்து ரவுண்டு போனபிறகு,

       என்னாச்சு மச்சான் என்று கதிர் கார்த்திக்கிடம் கேட்க,

       என்ன சொல்றது மச்சான் எனக்கு வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை போல, அம்மா அப்பாவும் இல்லை. சொந்தம்னு சொல்லிக்க ஒருத்தனும் இல்ல. சரி என் தேன்மொழி கிடைச்சுட்டா சந்தோஷமா இருந்தேன்.    அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு தெரிஞ்சப்புறம் என் வேலைய பார்த்துட்டு தான் இருந்தேன். ஆனா இதுவரைக்கும் அவ புருஷன பத்தி எந்த ஒரு விஷயமும் அவளே சொல்லாதப்ப ..... ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை தேன்மொழி எனக்கு தான்ற  மாதிரி. அனிதா ஓட அப்பா, அம்மா ஹாஸ்பிடல்ல அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்கடா. அப்ப எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருந்துச்சி தெரியுமா..... நமக்கும் ஒரு வாழ்க்கை அமைய போகுதுனு நினைச்சேன். சரி அவக்கிட்ட இன்னைக்கு பேசலாம்னு போனா....... அவளுக்கு கல்யாணம் ஆன சர்டிபிகேட் தான் பார்த்தேன் மச்சி. அதுல தேன்மொழிக்கும், கார்த்திக்கேயன் என்பவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுனு இருந்துச்சு.

     என்னால என்ன பண்றது, என்ன யோசிக்கிறது, எதுவுமே புரியல மச்சான். கைவரைக்கும் ஒரு பொருள் கிடைச்சி யாரோ பறிச்சிட்டு போன மாறி இருக்குடா. முடியல மச்சான் மனசே வலிக்குது. எதுக்குடா அந்த கடவுள் தேன்மொழி-ய என் கண்ணுல

9 comments

  • [quote name=&quot;Danu&quot;]Thank u so much for your valuable review ravai sir. 😊🙏🏻பேர்க்மன்??? அப்புடினா சார்🤔🤔[/quote]<br />இந்த ஐபேட் நான் சொல்லாத எதையோ அடிக்குது, எனக்கே தெரியலே, சாரி, தனு!
  • Thank u so much for your valuable review ravai sir. 😊🙏🏻பேர்க்மன்??? அப்புடினா சார்🤔🤔
  • Dear Dhanu! Good afternoon! தண்ணி அடிக்காமயே, எனக்கு போதை ஏற்படும்போது இருக்கு! இத்தனை திடீர் திருப்பங்களா? ஆமாம், அந்த பேர்க்மன் புதுசாக அல்லது பழசுதானா? Very good!
  • Nice episode ma'am :hatsoff: . Hahaha anitha intha shocka ethir paathiruka maadanka :grin: . Kathir ulaha maha nadipuda saami 😂😂. thenmozhi da past life enna enduratha enkaluku solladium karthik idamaavathu sollidunka ma'am 😉😉. Waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.