தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 15 - தனுசஜ்ஜீ
அடுத்த நாள் காலை ரம்மியமாக விடிந்தது.
உன்னோடு தான்......
இனி உன்னோடு தான்.......
என் வாழ்க்கையே இனி உன்னோடு தான்.....
மேசையில் இருந்த அலைபேசி அலறியது.
மப்பில் இருவரும் கவிழ்ந்து கிடக்க.....இந்த ரிங்டோன் சத்தத்தில் முதலில் விழித்தது கார்த்திக் தான். நம்ம ரிங்டோன் இது இல்லையேஎன்ற யோசனையுடன் போனை எடுத்து தூக்க கலக்கத்தில் காதில் வைத்து ஹலோ என்றான்.
ஹலோ கதிர் தம்பிங்களா நான் அனிதா ஓட அப்பா பேசுறேன் பா.
நான் கதிர் இல்ல அங்கிள் கார்த்திக். இருங்க அங்கிள் கதிர் கிட்ட தரேன் என்று போனை மியூட்டில் போட்டு கதிரை எழுப்பினான்.
மச்சி எந்திரிடா என்று அவனை உலுக்க.....
கார்த்திக் உலுக்கிய உலுக்கலில் தூக்கம் கலைந்த அவன் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று அவனை தள்ளிவிட்டான்.
டேய் லூசு உன் மாமனார் தான் லைன்ல இருக்காருடா எந்திரி.....
கார்த்திக் கூறியதும் உடனே எழுந்து அமர்ந்தவன் போனை வாங்கி பவ்யமாக காதில் வைத்து ஹலோ அங்கிள்.....சொல்லுங்க என்றான்.
கதிர் தம்பி முக்கியமான வேலைல இருக்கீங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டனா.....
இல்ல இல்ல அங்கிள் அப்புடியெல்லாம் இல்ல நீங்க சொல்லுங்க......
ஒண்ணுமில்ல தம்பி எங்க வீட்டுக்கு அனிதாவை கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாமேனு.
கதிருக்கு பகிரென்றது. என்ன அங்கிள் அதுக்குள்ள கிளம்புறீங்க..... அனிதாக்கு இன்னும் ஃபுல்லா கியூர் ஆகல அங்கிள். ஒரு வாரம் கழிச்சு போகலாமே அங்கிள்.
அப்படி தான்பா நானும் சொன்னேன். ஆனா அனிதா தான் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல பரவால்ல நம்ம வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாப்பா அதனால நாங்களே ஓகே சொல்லிட்டோம்பா....
ஓ அப்படியா அங்கிள் சரி அங்கிள். அனிதாவே சொல்லிட்டாங்களா....
ஆமா தம்பி. அதான் நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா கூட வந்து இப்பவே பொண்ணு பாத்துட்டீங்கனா நல்லா இருக்கும். அப்படி இல்ல நீங்க பிசியா இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்ல. ஃப்ரீயா இருக்குறப்ப ஒரு கால் பண்ணுங்க தம்பி. இதைக் கேட்கிறதுக்கு தான் போன்