தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 25 - ஜெபமலர்
மன்னிக்க வேண்டும் அன்பு வாசகர்களே... இந்த கதை தான் நான் எழுதிய கொஞ்சம் பெரிய கதை... அதை போல மிக அதிக இடைவெளி விட்டு அத்தியாயம் பதிவு செய்யும் கதையும் கூட.. சில காரணங்களால் என்னால் இந்த கதையின் முடிவு எபியை சீக்கிரமாக அளிக்க முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்...
கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்து கொண்டு இருந்த குயிலியின் மனக்கண்ணில் அவளது சிறு வயது நாட்கள் தோன்றியது.
ஏய் கார்த்திக்... நாம வேற ஊருக்கு போகனும். என்ன டிரஸ் போடுவதுனு தெரியல...
நான் எடுத்து தருகிறேன் என்றவன் இளம் பச்சை நிறத்தில் இருந்த பட்டு பாவாடை சட்டையை எடுத்தான்.
இதுவா... எத்தனை டிரஸ் இருந்தாலும் நீ இந்த ஒரு டிரஸையே எடு... நான் இதை போட மாட்டேன் என்று வேறு ஒரு உடையை எடுத்தாள்.
குயிலி... இந்த பச்சை கலர் பட்டு பாவாடை சட்டையை நீ போட்டுகிட்டா ரொம்ப அழகா இருப்ப... அதோடு பூ வைச்சா உன்னை போல அழகு வேறு யாரும் கிடையாது என்று சொல்லியதோடு நிறுத்தாமல், நீ வளர்ந்த பிறகு பச்சை கலர் பட்டு புடவை கட்டி தலை முடியை பின்னி தலை நிறைய பூ வைச்சிக்கனும். அது தான் இந்த மாமனுக்கு பிடிக்கும் என்று சொல்ல அவளோ உன்னை மட்டும் இல்லை உன் பேச்சை கூட பிடிக்கல... இனி எப்பவும் உனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்க மாட்டேன் என்று சொன்னவள் அவனுக்கு பிடிக்காத வர்ணத்தில் ஒரு ப்ராக் எடுத்து போட்டதோடு அவனிடம் முறைத்து கொண்டு சென்றது நினைவு வந்தது. அன்று தான் அவனை பிரிந்தது. அவனை மட்டும் அல்ல... அவளது மொத்த குடும்பத்தையும் பிரிந்து வாழ்ந்தது நினைவிற்கு வந்தது.
கடந்த கால நினைவுகளை பின்னுக்கு தள்ளி விட்டு தன்னை பார்த்தாள். அவள் பூங்குழலியாக வளர்ந்த போது அவளுக்கு தலை பின்னி விடவோ அவளை அலங்கரித்து விடவோ யாருமில்லை. அதனால் தலை முடியை மொத்தமாக சேர்த்து ஒரு ஹேர் பேண்ட்டில் அடக்கி விடுவது வழக்கம்.
வளர்ந்த பிறகு பள்ளி நாட்களில் இரட்டை ஜடை போட்டாலும் எப்போதும் மொத்த முடியையும் சேர்த்து ஹேர் பேண்ட்டில் அடக்கி விடுவாள்.
ஆனால் இன்று முதன் முறையாக முடியை பின்னி மல்லிகை பூவை எடுத்து தலையில் வைத்தாள்.
அவளையே அறியாமல் அவளையே ரசித்து பார்த்து கொண்டு இருக்க அவளுக்கு பின்னால் கார்த்திக் "செம்ம அழகுடீ என் செல்ல பெண்ணே" என்றவாறே அவள் அருகில் வருவது