கண்ணாடியில் தெரிந்தது.
உடனே கோபத்தில் விறைத்து கொண்டு திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை... அடச்சே என்றவாறே ஒரு நமட்டு சிரிப்புடன் வெளியே வந்தவளை பார்த்ததும் சங்கர் போகலாம் என்று சொல்ல ஆசிர்வாதம் தாத்தா உடன் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
அங்கு அருகில் இருந்த அறையில் அவளது அப்பா அம்மா இருவரும் இருப்பது தெரிந்ததும் காரை விட்டு இறங்கி ஓட்டமும் நடையுமாக சென்று கதவை தட்ட கையை வைக்க கதவு தானாக திறந்து கொண்டது.
அவள் கண் முன்னே கதவை திறந்தவாறே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான். அவனை பார்த்ததும் அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொள்ள வேண்டும் போல தோன்றியது. அதே உணர்வுடன் கார்த்திக் அவளை நோக்கி முன்னேற ஒரு நொடிக்குள் தன்னை சுதாரித்து கொண்டவள் முகத்தில் இருந்த புன்னகையை துடைத்து விட்டு வெறுப்பான பார்வையை பரிசளித்து விட்டு அம்மா என்றபடி அவனை கடந்து சென்று தாயை கட்டி அணைத்துக் கொண்டு கதறினாள்.
அருகில் வந்த தந்தை பாப்பா... அழாதடா என்று முதுகில் ஆதாரவாக தட்டி கொடுக்க அவரை கட்டி அணைத்துக் கொண்டாள்.
இத்தனை வருட பிரிவுகள் வருத்தம் ஏக்கம் கவலை எல்லாம் கண்ணீராக வெளியேற உடலில் இருந்த நடுக்கம் மறைய வெகுநேரம் எடுத்தது.
சிறிது நேரம் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறிய நலம் விசாரிப்புகளை முடித்துக் கொண்டு விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
திருவிழாவில் காணமல் போய் விடக்கூடாது என்று கவனமாக தாய் தந்தை இருவரின் கையையும் பிடித்து கொண்டு நடக்கும் குழந்தையைப் போல இருவரோடு இணைந்தே நேரம் செலவழித்தாள்.
பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் மனம் விட்டு பேச முடியாமல் தாய் தந்தையோடு ஒட்டி கொண்டே இருந்தாள்.
விழா ஆரம்பமானதும் தாய் தந்தை இருவரும் மேடைக்கு சென்று விட கார்த்திக் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.
அவனை பார்த்ததும் முகத்தை வெடுக்கென்று திருப்பி கொண்டாள். ஆனால் அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் விருப்பப்படி அவள் புடவை கட்டி இருப்பதே அவள் மனதை எடுத்து காட்ட நீ எப்பவுமே இந்த மாமனுக்கு பிடிச்ச செல்ல பொண்ணுடீ என்று சொல்ல ஆவேசமாக அவனைப் பார்த்து திரும்பியவள் அவன் முகத்தில் தெரிந்த ஏக்கம் கலந்த காதலைக் கண்டதும் வாயை