(Reading time: 7 - 13 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

சொன்னேன்...“எங்க வீட்டிலேயும் அதே பிரச்சினைதான் ரம்யா...எங்கப்பா...அவரே கொடுவாளைத் தூக்கிட்டார்...”ன்னு இவரும் புலம்பினாரு....பார்த்தோம்...இந்தச் சமூகம் இன்னும் சாதியை விடவில்லை....கெட்டியாப் பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்கு!...இங்க நாம போராடி..சாதியிடம் தோற்பதை விட...உயிரை விட்டு..நம்ம காதலை ஜெயிக்க வைப்போம்!”னு முடிவு பண்ணிட்டோம்”

சில நிமிடங்கள் யோசனையாய் அவர்களிருவரையும் பார்த்த ரவீந்தர், “நீங்க ரெண்டு பேரும் உங்க காதல்ல உறுதியாய் இருக்கீங்க! என்பது நீங்க ரெண்டு பேரும் கிணற்றுச் சுவத்து மேலே ஏறி நின்னதிலேயே தெரிஞ்சிடுச்சு!...என்னுடைய ஒரே கேள்வி... “ராஜேஸ்...படிச்சு முடிச்சாச்சு!”ன்னு சொன்னீங்க...ஏதாவதொரு உத்தியோகத்துல சேர்ந்திட்டீங்களா?” கேட்டான்.

“சார்...நான் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி...காலேஜை விட்டு வெளிய வந்த இருபதாவது நாள்ல வேலைல ஜாய்ன் பண்ணிட்டேன்”

“வெரி குட்!...வேலை எங்கே?...இதே பொள்ளாச்சியிலா?...இல்லை...வெளியூரிலா?”

“கோயமுத்தூர்ல சார்!...டைடல் பார்க்லே”

“ம்ம்ம்...” என்று தாடையைத் தட்டிக் கொண்டு யோசித்த ரவீந்தர், “ம்ம்ம்...உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க...நேர் வழில போனா காரியம் நடக்காது!...குறுக்கு வழிதான் வொர்க் அவுட் ஆகும்!...தம்பீ...“சில நேரங்கள்ல குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்!...அடுத்தவங்களுக்கு குழி பறிக்க அல்ல!...அடுத்தவங்க நமக்காகப் பறிச்சு வெச்சிருக்கற குழில நாம விழாம இருக்க!...” என்றான்.

“சார்...நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேரணும்!...சேர்ந்த பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாம வாழணும்!”...அதுக்காக எதையும் சந்திக்கத் தயார் சார்” என்றாள் அந்த ரம்யா.

அதை ஆமோதிப்பது போல் ராஜேஸும் தலையசைத்தான்.

“ஓ.கே...”என்ற ரவீந்தர், “பொதுவாகவே இந்த மாதிரி சாதி வெறி பிடிச்ச குடும்பத்தைச் சேர்ந்தவங்க...ஏதோவொரு சாமியார் கிட்டேயோ...இல்லை ஜோதிடர் கிட்டேயோ...முழு நம்பிக்கையோட இருப்பாங்க!...அப்படி யாராச்சும் உங்க குடும்பத்துக்கு இருக்காங்களா?” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.

“அப்படி யாரும் இல்லை....ஆனா...எங்க அண்ணனைப் பணிய வைக்க ஒரு ஆயுதம் இருக்கு!...” என்று அந்த ரம்யா இழுக்க,

“ம்...சொல்லு...சொல்லு....” பரபரத்தான் ரவீந்தர்.

“எங்க வீட்டு மாட்டுத் தொழுவத்துல “அன்னம்மா”ன்னு ஒரு கீழ்சாதிப் பொண்ணு...சாணி அள்ளுறது....மாடுகளைப் பராமரிக்கறது மாதிரியான வேலைகளைப் பார்த்திட்டு இருந்திச்சு!...கல்யாணமாகாத அந்தப் பொண்ணை எங்கண்ணன் பாலியல் ரீதியா

4 comments

  • Nice update sir 👏👏👏👏👏 indha rajesh saga eppadiyo ready ya irukaru fight seithu tholaiya vendiyadhu thane.....ellarukkum marketing pulli than help pananuma..kashtam!! Ippove Ramya ippadiye escape agidalam....ivaru oda first and last step-a extreme ah illa yosikuraru facepalm <br /><br />Ramya could have been proactive, avanga annan seyradhai video edukuradhai vittu she could have got down in action steam Adhai oru lead ivanga kadhal win panuradhukku badhila she could have filed a case against him!!! Ini ena agum???<br /><br />Thank you
  • Sema. உப்பாயம்மன் சுதாகர் மூலம் சாமியாடி அருள்வாக்கு சொல்லப்போகுதோ

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.