தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ
ஒருபுறம் ஆதவன் தன் வேலை முடித்து அந்தி சாய . . அள்ளி மலர்கள் மொட்டு அவிழ்க்க அம்புலி தன் வெள்ளி கிரணங்களை மெல்ல மெல்ல உலகிற்கு வீசியபடி எழும்பிக் கொண்டிருந்தது.
தனுஷ் காரை செலுத்தியபடியே ஏ.சி.யை நிறுத்தி கார் கண்ணாடிகளை இறக்கினான். விர்ரென்று காற்று அவன் கற்றை முடிகளை கலைத்தது. முகத்திற்கும் மனதிற்கும் இதமாய் இருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் பிருந்தாவை சந்திக்க உள்ளான் என்னும் எண்ணமே தித்தித்தது.
காரின் ஆடியோ சிஸ்டத்தில் அவனுக்கு பிடித்த “கண்ணும் கண்ணும் நோக்கியா . . நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா” என்ற பாடல் அலறிக் கொண்டிருந்தது. “இனி காதலர் டாப்10 வரிசையிலே . . இந்த பூமியில் நாம்தான் முதலிடமே” என்னும் வரியை ரசித்து தானும் பாடினான். மனம் துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டது.
இத்தனை உற்சாகமாய் அவன் ரசித்து பாடி வெகு நாட்கள் ஆகிவிட்டது. தன்னவளுக்காக தேடிபிடித்து அலைந்து திரியாமல் ஒரே நொடியில் திட்டமிட்டு வாங்கிய பரிசான தங்க மோதிரம் பக்கத்து சீட்டில் ஜம்மென்று அமர்ந்திருந்தது. அவனின் ஒவ்வொரு அணுவிலும் பிருந்தா நிறைந்திருந்தாள்.
அவளை முதல் முறையாக தனிமையில் சந்திக்கப் போகிறான். முன்பு நிகழ்ந்த சந்திப்பு குடும்பத்துடன் இருந்ததால் அவளுடன் மனம்விட்டு அளவளாவ முடியவில்லை.
சிக்னலில் சிவப்பு விளக்கு வண்டியை நிறுத்த கட்டளையிட்டு அவனை எரிச்சலூட்டியது.
“ஷிட்” என சஞ்சய் எப்பொழுதும் சிக்னலில் மாட்டிக் கொண்டால் அலுத்துக் கொள்வான்.
“சிக்னல்ல ரெண்டு நிமிஷம் நின்னா என்ன ஆகிடப் போகுது?” என சஞ்சைக்கு எத்தனை முறை போதித்திருப்பான் என்கிற எண்ணம் மனதில் ஊஞ்சாலட.
“ஷிட்” என புலம்புவது இன்று தனுஷின் முறையானது மெல்லிய புன்னகையுடன்.
சிவப்பு மஞ்சளாய் உருப்பெற்று இன்னும் சில நொடிகள் ஆகும் என வெறுப்பேற்றியது.
பச்சை விளக்கு அவன் காதலுக்கு இடையூறு செய்யாமல் அவனை வழியனுப்பியது. இன்னும் இரண்டு வளைவுகளை கடந்தால் அவர்கள் சந்திக்கும் மால் வந்துவிடும்.அங்கேயே சுற்றிவிட்டு இரவு உணவை அவளுக்கு பிடித்த புட்கோர்டில் சாப்பிடுவது என இருவரும் முடிவு செய்திருந்தனர்.
மாலை நேரம் என்பதால் போக்குவரத்து அதிகமாய் இருந்தது. இன்னும் எத்தனை சோதனை என அலுப்புடன் வளைவில் திரும்ப எத்தனித்தான்.
தூரத்தில் சஞ்சய் பைக்கை ஸ்டார்ட் செய்வதும் முடியாமல் வண்டியை உதைப்பதும்