அவன் போட்ட மோதிரத்தை அழகு பார்த்தாள். அவள் முகமும் வெட்கத்தால் செம்மையாய் மாறியிருந்தது.
அந்த மாலில் பெரும்பாலும் இளம் ஜோடிகள் கைக் கோர்த்து தங்களை மறந்த நிலையில் தான் இருந்தது. இவர்களை யாரும் கவனிக்கப் போவதில்லை இருப்பினும் பிருந்தா சிறு தீண்டுதலுக்கு வெட்கப்படுவதை தனுஷ் ரசிக்கதான் செய்தான்.
“யாரும் கவனிக்க மாட்டாங்க” என அவளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் மிருதுவாய் கூற. . இருவர் விழிகளும் ஒன்றாய் கலந்து. மீள வழியில்லாமல் இன்பமாய் அல்லல்பட்டது.
“சீசீ கேமரா இருக்கலாம்” என்றபடி அந்த இடத்தை பதட்டதுடன் ஆராய்ந்தாள்.. அங்கே ஏதுமில்லை என்பதில் திருப்தியடைந்தவளிடம் “இப்ப ஓகேதானே” குறுஞ்சிரிப்புடன் அவள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தான்.
அவளும் அவனுடன் தன்னை மறந்து சென்றாள். மௌனமே அவர்களின் மொழியானது. ஒரிடத்தில் இருவரும் அமர இன்னமும் அவளின் கைகள் சிறைப்பட்டிருந்தன. அக்கம் பக்கம் யாரும் இல்லை. அவள் அவன் தோள் மேல் சாய இச்செயலால் குதூகலித்து திக்குமுக்காடி போனான் தனுஷ்.
“அடுத்த வாரம் இந்நேரம் நம்ம நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கும் இல்லையா?” மந்திரத்தால் கட்டுண்டவள் போல் பேசினாள்.
“ம்ம்” என்றான் மோன நிலையில் சஞ்சரித்தவனாய்
“அப்புறம் நம்ம கல்யாணம்” என்றாள்
“ஆமா”
இருவரும் தமதம் மனக்கண்ணில் தங்கள் திருமண வைபவத்தை கண்டு ரசித்தனர்.
“தனுஷ் உங்க காதல் எந்த நிலையிலும் மாறிடாதே? என்னை எப்பவும் இதே மாதிரி . . . ?” முடிக்க முடியாமல் தவித்தாள் பாவை.
“இது என்ன கேள்வி பிருந்தா?”
“காலங்களும் காட்சிகளும் மாறலாம் தனுஷ்” என்றவள் கண்களில் நீர் திரையிட்டது.
மறுபுறம் திரும்பி கண்ணீரை அவன் பார்க்காத வண்ணம் துடைத்துக் கொண்டாள். அவனோ அவள் நாணுகிறாள் என எண்ணினான்.
“எந்த மாறுதலும் என் காதலை மாத்த முடியாது”
“தேங்க்ஸ் தனுஷ்”
அவள் முகத்தை தன் கையிலேந்தி அவள் கண்களை ஊடுருவியப்படி “ஐ லவ் யூ” என்றான் மெய்மறந்த நிலையில்.
அவளின் கூற்று தனுஷிற்கு புரியவில்லை. அதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் அவனுக்கு